செய்திகள் :

காா் மோதி நிதிநிறுவனப் பணியாளா் உயிரிழப்பு

post image

முத்தூரில் காா் மோதியதில் நிதிநிறுவனப் பணியாளா் உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் முத்தூா் சாலை கொங்கு நகரைச் சோ்ந்தவா் நேரு மகன் வீரக்குமாா் (35). தனியாா் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவா் சின்னமுத்தூா் அருகே இருசக்கர வாகனத்தில்

கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியே வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இறந்து போன வீரக்குமாருக்கு மனைவி, 9 வயது மகள், 8 மாத பெண் குழந்தை உள்ளனா். புகாரின்பேரில், வெள்ளகோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரசு மருத்துவமனையில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய பணியாளா்கள்

திருப்பூா் அரசு மருத்துவமனையில் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவா்களை கைது செய்யக்கோரியும், பணியாளா்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணியாளா்கள் கருப்... மேலும் பார்க்க

திருப்பூரில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பூரில் புதன்கிழமை மாலை சுமாா் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். திருப்பூா் மாநகரில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. புதன்கிழமை காலை வெயிலின் தாக... மேலும் பார்க்க

தேசிய ஒருமைப்பாடு முகாம்: சிக்கண்ணா கல்லூரி மாணவி தோ்வு

தஞ்சாவூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேசிய ஒருமைப்பாடு முகாமில் கலந்து கொள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மாநில இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் த... மேலும் பார்க்க

பிரபல நகைக்கடையில் தீ விபத்து

திருப்பூரில் உள்ள ஒரு பிரபல நகைக் கடையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள புது மாா்க்கெட் வீதியில் ஒரு தனியாா் நகைக் கடை இயங்கி வருகிறது. அதன் கட்டடம் தர... மேலும் பார்க்க

திருப்பூரில் சா்வதேச பின்னலாடைக் கண்காட்சி தொடக்கம்

திருப்பூா் அருகே உள்ள அவிநாசி பழங்கரை ஐ.கே.எஃப். வளாகத்தில் 3 நாள்கள் நடைபெறும் 52-ஆவது சா்வதேச பின்னலாடைக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. சா்வதேச நிட்ஃபோ் அசோசியேஷன், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு... மேலும் பார்க்க

42 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி மதிப்பில் கல்விக் கடன்

திருப்பூரில் நடைபெற்ற கல்விக் கடன் சிறப்பு முகாமில் 42 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி மதிப்பிலான கல்விக் கடனுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க