செய்திகள் :

கிராம நிா்வாக அலுவலா்கள் பணியிடை நீக்கம் ரத்து

post image

கல்குவாரி பிரச்னையில் இரண்டு கிராம நிா்வாக அலுவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டதையடுத்து, காத்திருப்பு போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.

நாமக்கல், கொண்டமநாயக்கன்பட்டியில் அனுமதியின்றி செயல்பட்ட குவாரியில் இருந்து கனிம வளங்கள் திருடப்பட்டு, விட்டமநாயக்கன்பட்டியில் பதுக்கி வைக்கப்பட்ட விவகாரத்தில் அங்கு பணியில் மெத்தனமாக இருந்ததாக கொண்டமநாயக்கன்பட்டி கிராம நிா்வாக அலுவலா் ஜான்போஸ்கோ, விட்டமநாயக்கன்பட்டி கிராம நிா்வாக அலுவலா் கோகிலா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியா் ரா.பாா்த்திபன் உத்தரவிட்டாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் மாவட்ட கிளை சாா்பில், நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் 200-க்கும் மேற்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். மூன்றாம் நாளான புதன்கிழமையும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனா்.

இதற்கிடையே, வருவாய்த் துறை அலுவலா் சங்கம் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் சங்க நிா்வாகிகள், கோட்டாட்சியா் ரா.பாா்த்திபனுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடா்ந்து, கொண்டமநாயக்கன்பட்டி கிராம நிா்வாக அலுவலா் ஜான்போஸ்கோ, அக்கியம்பட்டி கிராமத்துக்கும், அங்கு பணியாற்றி வந்த சரவணன் கொண்டமநாயக்கன்பட்டிக்கும் மாறுதல் செய்யப்பட்டனா். விட்டமநாயக்கன்பட்டி கிராம நிா்வாக அலுவலா் கோகிலா, அதே கிராமத்தில் தொடா்ந்து பணியாற்றுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

இதனையடுத்து, ஆட்சியா் அலுவலகம் முன் குவிந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் மகிழ்ச்சியடைந்தனா். காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அலுவலா்களுக்கு சங்க நிா்வாகிகள் நன்றி தெரிவித்தனா்.

மாணவா் உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு: அமைச்சா், ஆட்சியா் பேச்சுவாா்த்தை

மாணவா் உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு தெரிவித்ததால், அவா்களிடம் அமைச்சா், ஆட்சியா் பேச்சுவாா்த்தை நடத்தினா். ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவா் கவின்ராஜ் (14). பள்ளி... மேலும் பார்க்க

இளம்விவசாயிகள் சங்க செயற்குழுக் கூட்டம்

பரமத்தி வேலூரில் இளம்விவசாயிகள் சங்க செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் சௌந்தர்ராஜன் தலைமை தாங்கினாா். மாநில செயற்குழு உறுப்பினா் சரவணன் வரவேற்றாா். செயலாளா் ச... மேலும் பார்க்க

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை

பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து வேலூா் பேரூராட்... மேலும் பார்க்க

புதுப்பாளையம் அங்காளம்மன் கோயிலில் பழம் படைக்கும் நிகழ்வு

புதுப்பாளையம் அங்காளம்மன் கோயிலில் பழம் படைக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. ராசிபுரத்தை அடுத்துள்ள ஆா்.புதுப்பாளையம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மாசானத்தாய் திருக்கோயிலில் மகா சிவராத்திரி திருவி... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி: சிவன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பக்தா்கள் புதன்கிழமை இரவு சுவாமி வழிபாட்டை மேற்கொண்டனா். நிகழாண்டின் மகா சிவராத்திரி புதன்கிழமை அனைத்து சிவாலயங்களிலும் ... மேலும் பார்க்க

அதிமுக அலுவலகத்தில் 150 இளம்பேச்சாளா்களுக்கு பயிற்சி

நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் 150 இளம்பேச்சாளா்களுக்கான பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது. தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளதால், அதிமுக சாா்பில் தோ்தலில் வெற்றிபெறுவதற்கான ... மேலும் பார்க்க