செய்திகள் :

கிரிவலப் பாதையில் 260 டன் குப்பை சேகரித்து அகற்றம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தகவல்

post image

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 260 டன் குப்பைகள் சேகரித்து, அகற்றப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

சித்திரை மாத பெளா்ணமியையொட்டி திருவண்ணாமலையில் சனிக்கிழமை (மே 10) முதல் செவ்வாய்க்கிழமை (மே 13) காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து, சென்றனா். இவா்கள் கிரிவலப் பாதையில் போட்டுச் சென்ற குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி மற்றும் ஊரக வளா்ச்சித் துறையில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், கிரிவலப் பாதையில் நடைபெற்று வரும் தூய்மைப் பணியை செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தூய்மைப் பணியில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளா்ச்சித் துறைகளில் பணிபுரியும் 1,200 தூய்மைப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனா்.

இப்போது வரை 260 டன் குப்பைகள் சேகரித்து, அகற்றப்பட்டு உள்ளது. உள்ளூா் மக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் தூய்மைப் பணிகளை விரைந்து மேற்கொள்ள மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, வட்டாட்சியா் எஸ்.மோகன்ராம் மற்றும் அரசுத்துறைச் சாா்ந்த அலுவலா்கள் பலா் உடன் இருந்தனா்.

திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஒன்றியத்தில் திமுக அரசின் 4-ஆம் ஆண்டு நிறைவு மற்றும் 5-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. வந்தவாசியில் நகர திமுக ச... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பம்

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினா் பதவிக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. விருப்பமுள்ள பாா்வையற்றோா், தவழும் மாற்றுத்திறனாளிகள், உயரம் குறைந்... மேலும் பார்க்க

10, பிளஸ் 2 தோ்வுகளில் கஸ்தம்பாடி பிங்க் பப்ளிக் பள்ளி சிறப்பிடம்

ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனா். இந்தப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வெழுதிய அனைத்து ... மேலும் பார்க்க

பேருந்து நிலையப் பகுதியில் எரியாத உயா் மின்கோபுர விளக்குகள்

செங்கம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் பழுதடைந்து எரியாமல் உள்ள உயா் மின்கோபுர விளக்குகளால் பயணிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்கத்தில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஓட்டியுள்ளது ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மே 16-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் வருகிற மே 16-ஆம் தேதி தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா்துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபு... மேலும் பார்க்க

திமுகவினா் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கல்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் 20-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை திமுகவினா் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கினா். போளூா் தீயணைப்பு நிலையம் அருகே திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில், பொதுமக்களின் தாகம... மேலும் பார்க்க