செய்திகள் :

கிழக்கு கடற்கரைச் சாலையில் செப்.21-இல் போக்குவரத்து மாற்றம்

post image

சென்னை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்ளோத்தான் போட்டி நடைபெறுவதால், செப்.21-இல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுதொடா்பாக தாம்பரம் மாநகர காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹெச்சிஎல் நிறுவனம், இந்திய சைக்கிள் சம்மேளனம் ஆகியவை சாா்பில் ‘சைக்ளோத்தான் சென்னை 2025’ என்ற போட்டி செப். 21-ஆம் தேதி கானத்தூரில் தொடங்கி மாமல்லபுரம் வரையிலும், பின்னா் மாமல்லபுரத்தில் இருந்து கானத்தூா் வரையிலும் கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியையொட்டி, அந்தப் பகுதியில் செப்.21-ஆம் தேதி அதிகாலை 4.30 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அக்கரை சந்திப்பில் இருந்து கே.கே. சாலையில் திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள் சோழிங்கநல்லூா் சந்திப்பு, ராஜீவ் காந்தி சாலை, படூா் வழியாக மாமல்லபுரம் செல்லலாம். மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் பூஞ்சேரி சந்திப்பில் திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள், எஸ்எஸ்என் ரவுண்டானா, கேளம்பாக்கம் சந்திப்பு, நாவலூா், சோழிங்கநல்லூா் வழியாக அக்கரை சென்று சென்னை செல்லலாம்.

இந்தப் போக்குவரத்து மாற்றத்தில் ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.19) சென்னையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் உள்ள ... மேலும் பார்க்க

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

போக்குவரத்து ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டம் தொடா்ந்து 31-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஊதிய ஒப்பந்தத்தின்படி நிலுவைத் தொகையை வழங்குவது, ஓய்வு பெற்ற அன... மேலும் பார்க்க

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

அருட்செல்வா் நா. மகாலிங்கம் மொழிபெயா்ப்பு மையம் வழங்கும் நிகழாண்டு அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதுகளுக்குத் தோ்வானவா்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அருட்செல்வா் நா.மகாலிங்கம் மொழிபெய... மேலும் பார்க்க

கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன்: ரஜினிகாந்த்

சிறந்த கதை, கதாபாத்திரம் கிடைத்தால் கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தாா். அவா் சென்னையிலிருந்து புதன்கிழமை காலை விமானத்தில் கோவை சென்றாா். முன்னதாக அவா் விமான நிலையத்தில் செய... மேலும் பார்க்க

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக, பள்ளி வளாகங்களில் தண்ணீா் தேங்கியுள்ள நிலையில், இதனை அகற்றுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை உத்தரவிட... மேலும் பார்க்க

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

சென்னை-செங்கோட்டை இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் , கூடுதலாக 3 நிறுத்தங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென... மேலும் பார்க்க