செய்திகள் :

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட வலியுறுத்தி உள்ளோம்: டி.ஆா்.பாலு

post image

புது தில்லி: மத்திய அரசு முடக்கி வைத்துள்ள கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளோம் என்று திமுக மக்களவை குழு தலைவா் டி.ஆா்.பாலு கூறினாா்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை(ஜூலை 21) தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, அமைச்சர் கிரண் ரிஜுஜு தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, அர்ஜுன் ராம் மேக்வால், எல். முருகன் மற்றும் காங்கிரஸ், திமுக, அதிமுக, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர். திமுக சார்பில் டி.ஆர். பாலு, அதிமுக சார்பில் தம்பிதுரை கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் மழைக்கால கூட்டத்தொடா் சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்துக்கு பின்பு செய்தியாளா்களர்களுடன் டி.ஆா்.பாலு பேசுகையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் நாளை தொடங்கவுள்ளது. அதில் பேச வேண்டியவைகள் என்னென்ன ? அரசின் பதிலை பெறுவதற்கான கருத்துரைகளை எடுத்துவைத்தோம். முக்கியமாக, பாகிஸ்தான் தூண்டுதலின் பேரில் நடைபெற்ற பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடா்பாக விவாதம் நடத்த கோரிக்கை வைத்தோம்.

மேலும் ‘அந்த தாக்குதலில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை, அவா்களை கைது செய்து நீதியின் முன்பு நிறுத்தவில்லை. அதேபோல ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை தான் கூறியதான் நிறுத்தப்பட்டதாகவும், 5 இந்திய போா் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறியுள்ளாா். இது தொடா்பாக பிரதமா் அவையில் பதில் அளிக்க வேண்டும்.

மேலும், மத்திய அரசு முடக்கி வைத்துள்ள கீழடி அகழ்வாய்வு அறிக்கையை வெளியிட வலியுறுத்தி உள்ளோம். மிக முக்கியமாக நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு முக்கிய பிரச்னையாக எழுப்பப்படும் என டி.ஆர்.பாலு கூறினார்.

பாமகவிலிருந்து 3 எம்எல்ஏக்கள் நீக்கம்! - ராமதாஸ் உத்தரவு

DMK Lok Sabha committee leader T.R. Balu said that the central government has frozen the Keezhadi excavation report and that we have insisted on its release at the all-party meeting held on Sunday.

ஜூலை 23-இல் பிரிட்டன், மாலத்தீவுக்கு மோடி 4 நாள் சுற்றுப்பயணம்

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை(ஜூலை 23) முதல் 26 வரை 4 நாள்களுக்கு பிரிட்டன் மற்றும் மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக மேற்கொள்ளவுள்ளார்.இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழகத்தை திரட்டுவோம்: உதயநிதி ஸ்டாலின்

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக அணி வெற்றி பெற ஓரணியில் தமிழகத்தை திரட்ட வேண்டும் என்று அக்கட்சி இளைஞரணியினருக்கு துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல் விடுத்துள்ள... மேலும் பார்க்க

ராகுல் காந்தி கருத்துக்கு பெ. சண்முகம் கண்டனம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், ஆர்.எஸ்.எஸ்யும் சித்தாந்த ரீதியாக சம அளவில் எதிர்த்து போராடுகிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கண்ட... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு!

பென்னாகரம்: கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அதிக அளவில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 43,000 கனஅடியாக அதிகரித்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட... மேலும் பார்க்க

மேட்டூர் உபரி நீர் திட்டத்தினை பனமரத்துப்பட்டி ஏரிக்கு கொண்டுவர வேண்டும்: கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்கம்

சேலம்: விவசாயத்துக்கு பயன்படும் வகையில் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை பனமரத்துப்பட்டி ஏரிக்கு செயல்படுத்தக் கோரி கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ... மேலும் பார்க்க

ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி காா்த்திகை விரதத்தையொட்டி தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயிலில்களில் ஏராளமான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் முக்கிய விசேஷ நாட்களில் ஒன்றாக கொண்டாடப... மேலும் பார்க்க