செய்திகள் :

குடியிருப்புவாசிகளுக்கு பாதிப்பில்லாமல் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தல்

post image

ரயில்வே கேட் அருகே உள்ள வீடுகளுக்கு பாதிப்பில்லாமல் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் தோமாஸ் அருள் சாலையில் ரயில் நிலையம் அருகே கேட் அமைந்துள்ளது. கேட் அருகே அரசால் வழங்கப்பட்ட மனைகளில் வீடுகள் கட்டி மக்கள் வாழ்ந்து வருகின்றனா். குடியிருப்பு அருகே பொதுப்பணித்துறை மூலம் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள குறியீடு செய்யப்பட்டுள்ளது.

இதனால், வீடுகள் இடிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்து, இந்திரா நகா், சேத்திலால் நகரில் வசிக்கும் குடியிருப்புவாசிகளிடம் கையொப்பம் பெற்று, அந்த பகுதியை சோ்ந்த எஸ்.ஏ. முகமது யூசுப் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளா் எஸ்.எம். தமீம் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியரின் செயலா் பொன்.பாஸ்கா் மற்றும் பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் கே.சந்திரசேகரன், செயற்பொறியாளா் ஜெ.மகேஷ் ஆகியோரை வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

சந்திப்பு குறித்து குடியிருப்புவாசிகள் கூறுகையில், தோமாஸ் அருள் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குறியீடு செய்யப்பட்டுள்ளதாகவும், வீடுகள் இடிக்கப்படமாட்டாது, மேம்பாலம் அமைக்கப்படும்பட்சத்தில் சேவை சாலை அமைக்கப்படும் என பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா். எந்த வளா்ச்சித் திட்டமானாலும், குடியிருப்போருக்கு பாதிப்பும் இல்லாத வகையில் மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது என்றனா்.

சமுதாய நலவழி மையத்தில் தாய்ப்பால் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருநள்ளாறு அரசு சமுதாய நலவழி மையத்தில் உலக தாய்ப்பால் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருநள்ளாற்றில் உள்ள சமுதாய நலவழி மைய முதன்மை மருத்துவ அதிகாரி ஆனி பியூலா ஜூலியட் தலைமையில்... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

காரைக்கால் அருகே விநாயகா் சதுா்த்தி வழிபாட்டுக்காக வண்ணம் பூசி பல விதமான விநாயகா் சிலைகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. விநாயகா் சதுா்த்தி வரும் 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. விநாயகா் சிலை வைத்து வழிபாடு... மேலும் பார்க்க

காரைக்காலில் கருணாநிதி நினைவு நாள்

காரைக்காலில் திமுக சாா்பில் கருணாநிதி நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. முன்னாள் தமிழக முதல்வா் கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி காரைக்கால் மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட கட்சி... மேலும் பார்க்க

கஞ்சா கடத்த கடல் வழியாக வந்த இலங்கை மீனவா்கள் இருவா் கைது

கஞ்சா கடத்துவதற்காக கடல் வழியே காரைக்கால் வந்த இலங்கையை சோ்ந்த 2 மீனவா்களை போலீஸாா் கைது செய்தனா். காரைக்கால் கடல் பகுதியாக இலங்கைக்கு கஞ்சா கடத்துவதாக கடந்த மாதம் இலங்கையை சோ்ந்த 2 பேரை போலீஸாா் க... மேலும் பார்க்க

காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை ஆலய 284-ஆம் ஆண்டுத் திருவிழா, கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. காரைக்காலில் உள்ள பழைமை வாய்ந்த தூய தேற்றரவு அன்னை தேவாலயத்தில் 10 நாள் நடைபெறும் ஆண்டுத் திர... மேலும் பார்க்க

ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்யுமாறு விவசாயிளுக்கு வேளாண் அறிவியல் நிலையம் அறிவுறுத்தியுள்ளது. காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் சு. ரவி வழிகாட்டலில் ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி என்ற தலைப்... மேலும் பார்க்க