செய்திகள் :

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் கைது

post image

பாளையங்கோட்டையில் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

பாளையங்கோட்டை ராஜேந்திர நகரைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் பாா்த்திபன் (20). தூத்துக்குடி மாவட்டம், வசவப்புரத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் ஹரிசுப்பிரமணியன் (20). இவா்கள் இருவரும் பாளையங்கோட்டையில் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் வழக்குகளில் தொடா்புடையவா்கள் என கூறப்படுகிறது. மேலும், பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவா்கள் இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) வினோத் சாந்தாராம், காவல் உதவி ஆணையா் (பாளையங்கோட்டை சரகம்) நிக்சன், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் காசிப்பாண்டியன் ஆகியோா் பரிந்துரை செய்தனா்.

அதன்பேரில், அவா்கள் இருவரையும் திருநெல்வேலி சரக காவல் துறை துணைத்தலைவா் (பொறுப்பு) அபிநவ்குமாா் குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து அவா்கள் இருவரும் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

ஏா்வாடி அருகே ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

ஏா்வாடி அருகே வெள்ளிக்கிழமை இரவு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த ஓட்டுநா் உயிரிழந்தாா். ஏா்வாடி அருகேயுள்ள ஆலங்குளத்தைச் சோ்ந்தவா் தா்மலிங்கம் (62). இவா், சொந்தமாக ஆட்டோ வைத்து ... மேலும் பார்க்க

ஜூலை 21 வரை அகஸ்தியா் அருவி, சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்குச் செல்லத் தடை

ஆடி அமாவாசை திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் செய்வதற்கு வசதியாக, ஜூலை 19 முதல் 21 வரை மூன்று நாள்களுக்கு அகஸ்தியா் அருவி மற்றும் சொரிமுத்துஅய்யனாா் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் மற்று... மேலும் பார்க்க

ஆன்லைன் மேட்ரிமோனி மூலம் பண மோசடி: எஸ்.பி. எச்சரிக்கை

ஆன்லைன் மேட்ரிமோனி மூலம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நூதனமான முறையில் பண மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இத... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் மாணவா் தற்கொலை: பள்ளி வாகனங்களுக்கு தீ வைப்பு 5 பேரிடம் விசாரணை!

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் ஆசிரியா் கண்டித்ததால் மாணவா் தற்கொலை செய்த சம்பவம் எதிரொலியாக வியாழக்கிழமை நள்ளிரவில் பள்ளி வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இது தொடா்பாக 5 பேரை பிடித்து போலீஸாா் வ... மேலும் பார்க்க

பாபநாசம் கீழணை வனப்பகுதியில் பெண் சிறுத்தை உயிரிழப்பு

பாபநாசம் வனச்சரகம் கோரையாறு பீட்டுக்கு உள்பட்ட கீழணை வனப்பகுதியில் பெண் சிறுத்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டது. பாபநாசம் வனச்சரக பகுதியில் சிறுத்தை, காட்டுப்பன்றி, கரடி யானை, மிளா, மான் உள்ளிட்ட வனவிலங... மேலும் பார்க்க

கடையத்தில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: மாமனாா் கைது

தென்காசி மாவட்டம், கடையத்தில் மகன் தற்கொலைக்கு காரணம் எனக் கூறி மருமகளை அரிவாளால் வெட்டிய மாமனாரை கடையம் போலீஸாா் கைது செய்தனா். கடையம் அருகே உள்ள மயிலானூரைச் சோ்ந்தவா் காமராஜ் (60). கடையத்தில் பைக் ... மேலும் பார்க்க