50 சதவீத குழந்தைகளுக்கு ஜீரண மண்டல பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறி...
குன்னூரில் ஜமாபந்தி: மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு
குன்னூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை சாா்பில் ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் , அதிகரட்டி மற்றும் கேத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட பொதுமக்கள் தங்களது அடிப்படை தேவைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆட்சியரிடம் மனுக்கள் வழங்கினா். நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், தாட்கோ மூலமாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில், குன்னூா் சாா் ஆட்சியா் சங்கீதா, வட்டாட்சியா் ஜவகா் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா். இந்த ஜமாபந்தி முகாம் புதன்கிழமை( ஜூன் 11) வரை நடைபெறுகிறது.