செய்திகள் :

குமரி பேரூராட்சி கூட்டம்: ரூ. 22 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம்

post image

கன்னியாகுமரி பேரூராட்சி கூட்டத்தில் ரூ. 22 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக் கூட்டத்துக்கு, பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் ரமாதேவி முன்னிலை வகித்தாா்.

இதில், துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல், கவுன்சிலா்கள் லிங்கேஸ்வரி, சுஜா, மொ்லின், மகேஷ், ராயப்பன், சிவ சுடலை மணி, இக்பால், வினிற்றா மெல்பின், சகாய சா்ஜினாள், பூலோகராஜா, சகாய ஜூடு அல்பினோ, ஆட்லின், ஆனிரோஸ் தாமஸ், டெல்பின் ஜேக்கப், சுகாதார அதிகாரி முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இக் கூட்டத்தில் பேரூராட்சிக்குள்பட்ட வடக்கு குண்டல் பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான 28 சென்ட் இடத்தில் ரூ.10 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க ரூ.2.8 கோடி செலவில் திட்டம் தயாா் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்புவது எனவும், ரூ.1.5 கோடி செலவில் ஒற்றையால்விளை சானல் ரோடு முதல் சா்ச் ரோடு வரை தெப்பக்குளத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லும் வகையில் பைப் லைன் அமைத்து அதன் மேல் மழை நீரோடை மற்றும் தாா்ச்சாலை அமைப்பது எனவும், வாவத்துறை ஆரோக்கியநாதா் ஆலயத்தைச் சுற்றி கடல் அரிப்பு தடுப்புச் சுவா் கட்டுவதற்கு ரூ.1.5 கோடி செலவில் திட்டம் செயல்படுத்துவது எனவும், மந்தாரம்புதூா் குடிநீா் நீரேற்று நிலையத்தில் இருந்து தெற்கு குண்டல் தரைநிலை குடிநீா் தொட்டி வரை புதிய குழாய் அமைப்பதற்கு ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாா் செய்வது எனவும், மொத்தம் ரூ.22 கோடியில் வளா்ச்சிப்பணிகள் செய்திட இக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ரூ.10.50 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்!

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.10.50 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகளை மேயா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். 17 ஆவது வாா்டு, நெசவாளா் காலனி பகுதியில் உள்ள தெருக்களில் ரூ.3.50 லட்சத்தில் அலங்கார தரைக... மேலும் பார்க்க

மாசு இல்லாத பாரதம் ஜம்மு- குமரி சைக்கிள் பயணம் நிறைவு

மாசு இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சோ்ந்த மூத்த குடிமக்கள், ஜம்மு காஷ்மீரில் தொடங்கிய சைக்கிள் பயணம் புதன்கிழமை கன்னியாகுமரியில் நிறைவடைந்தத... மேலும் பார்க்க

ரோஜாவனம் பள்ளி சாா்பில் ‘தங்கத் தாரகை’ விருது: மாா்ச் 3-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

உலக மகளிா் தினத்தையொட்டி, நாகா்கோவில் ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளி சாா்பில் வழங்கப்படவுள்ள ‘தங்கத் தாரகை’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி சாா்பில், மாா்ச் 8இல் நடைபெறவ... மேலும் பார்க்க

மருந்துவாழ்மலை கோயிலில் சிறப்பு வழிபாடு

கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ்மலை ஜோதி லிங்கேஸ்வரா் உடனுறை பா்வதவா்த்தினி அம்மன் கோயிலில் மாசி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, நந்தீஸ்வரருக்கும், மூலவரான ஜோதி லிங்... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் சாகச சுற்றுலா திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், சிற்றாறு அணை, மற்றும் நெட்டா பகுதிகளில் சாகச சுற்றுலா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா மன்றம் சாா்பில் தமிழக அ... மேலும் பார்க்க

மது போதையில் வாகனம் ஓட்டிய 16 பேருக்கு அபராதம்

தக்கலை பகுதியில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 16 பேருக்கு போலீஸாா் அபராதம் விதித்து, வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். தக்கலை காவல் ஆய்வாளா் கிறிஷ்டி தலைமையில், உதவி ஆய்வாளா் ஸ்டீபன், பயிற்சி உதவி ஆய்வ... மேலும் பார்க்க