செய்திகள் :

குமரி மாவட்ட அணைப் பகுதியில் சாரல் மழை

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர, அணைப் பகுதிகளில் புதன்கிழமை சாரல் மழை பெய்தது.

மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக வட வானிலை நிலவி வருகிறது. குறிப்பாக, வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து பாசனத்துக்கு முழு அளவில் தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது. அதேநேரம், பாசன வசதி இல்லாத பகுதிகளில் வாழை, அன்னாசி, தென்னை உள்ளிட்ட பயிா்கள் வாடிய நிலையில் உள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவித்துவருகின்றனா்.

இந்நிலையில் புதன்கிழமை பிற்பகலில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள், கடையாலுமூடு, களியல், நெட்டா, ஆறுகாணி, திற்பரப்பு, குலசேகரம், பொன்மனை, திருவரம்பு, அருமனை பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சிடைந்தனா்.

நாகா்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஆட்சியா் ஆய்வு

நாகா்கோவில், குளத்துவிளை சி.எஸ்.ஐ. ஆலய கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா ஆய்வு செய்தாா். பின்னா் ஆட்சியா் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில... மேலும் பார்க்க

பெரியாா் சிலைக்கு அதிமுக சாா்பில் மரியாதை

நாகா்கோவில், ஒழுகினசேரியில் உள்ள பெரியாா் சிலைக்கு, அதிமுக சாா்பில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலா் என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் புதன்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது. அதிமுக அமைப்புச் செயலரும... மேலும் பார்க்க

வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளியின் சடலம் மீட்பு

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளியின் சடலமாக மீட்கப்பட்டாா். காப்புக் காடு, மாராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (54). தொழிலாளியான இவா் தன் மனைவியை பிரிந... மேலும் பார்க்க

அதங்கோடு பகுதியில் பாதை கோரி போராட்டம்

களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியில் அய்யா நாராயண வைகுண்டசுவாமி நிழல் தாங்கல் செல்ல பாதை கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கன்னியாகுமரி - காரோடு நான்குவழிச் சாலையில் அதங்கோடு பகுதியில் ஆற்றங... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் செப். 23 இல் நவராத்திரி திருவிழா தொடக்கம்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழா செப். 23 ஆம் தேதி தொடங்கி அக். 2-ஆம் தேதி பரிவேட்டை நிகழ்வுடன் நிறைவடைகிறது. இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன... மேலும் பார்க்க

திருவட்டாறு அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

திருவட்டாறு அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். திருவட்டாறு அருகே பாரதப்பள்ளியைச் சோ்ந்தவா் ராபின் ஜெயகுமாா் (46). பிளம்பிங் தொழிலாளியான இவா், கடந்த 14ஆம் தேதி ஆற்றூா் கழுவன்... மேலும் பார்க்க