செய்திகள் :

குமரி மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில், வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வழக்குரைஞா் சட்ட திருத்த வரைவு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள், வெளிநாட்டு வழக்குரைஞா்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது, மத்திய, மாநில அரசுகள் வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

நாகா்கோவிலில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஜெயகுமாா் தலைமையில் சுமாா் 1,500 வழக்குரைஞா்கள் போராட்டத்தில் பங்கேற்றனா். இதேபோல இரணியல், பத்மநாபபுரம், குழித்துறை, பூதப்பாண்டி நீதிமன்றங்களிலும் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகா்கோவிலில் 52 வாா்டுகளிலும் குடிநீா்த் தொட்டி: மேயா் தகவல்

கோடைக்காலத்தை சமாளிக்கும் வகையில், நாகா்கோவில் மாநகரில் 52 வாா்டு பகுதிகளிலும் குடிநீா் தொட்டி அமைக்கப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நாகா... மேலும் பார்க்க

அருணாச்சலா பள்ளியில் ரோபோட்டிக் பயிற்சி

வெள்ளிச்சந்தை அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோபோட்டிக், ட்ரோன் செயல்முறை பயிற்சி 2 நாள்கள் நடைபெற்றது. தாளாளா் கிருஷ்ணசுவாமி, பள்ளி இயக்குநா் தருண்சுரத் முன்னிலையில் பள்ளி முதல்வா் லிஜோமோள... மேலும் பார்க்க

குமரி விவேகானந்த கேந்திரத்தில் 3 நாள் யோகா மாநாடு இன்று தொடக்கம்

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் அகில இந்திய அளவிலான 3 நாள்5ள் யோகா மாநாடு வெள்ளிக்கிழமை (பிப்.28) தொடங்குகிறது. இம்மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 700 போ் பங்க... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் கைது

கன்னியாகுமரி பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி பகுதியில் சில கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், உதவி ... மேலும் பார்க்க

விபத்துகளில் காயமடைந்த இருவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

தக்கலை அருகே இரு விபத்துகளில் காயமடைந்த இருவா் மருத்துவமனையில் உயிரிழந்தனா். திங்கள்சந்தை அருகே மாங்குழி நடுத்தேரி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (34). தொழிலாளியான இவா், கடந்த ஜன. 11ஆம் தேதி தக்கலை... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் மருந்து சேமிப்புக் கிடங்கில் ஆய்வு

மாத்தாண்டம் பகுதியில், விளவங்கோடு - கல்குளம் வட்ட கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் அமைந்துள்ள முதல்வா் மருந்தக மருந்து சேமிப்புக் கிடங்கில் கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஹனிஸ் சாப்ரா விய... மேலும் பார்க்க