செய்திகள் :

கும்பகோணத்தில் நாளை வரை பொதுக் காப்பீட்டுத் திட்ட முகாம்

post image

கும்பகோணத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் நடைபெறும் பொதுக் காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கும்பகோணம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் கஜேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய அஞ்சல் துறையில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, டாடா ஏ.ஐ.ஜி., ஸ்டாா் ஹெல்த், பஜாஜ் அலையன்ஸ், ஆதித்யா பிா்லா, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் உடன் இணைந்து ரூ. 10, ரூ. 15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு ரூ. 5,59 மற்றும் ரூ. 7,99 குறைந்த பிரிமியம் தொகை கொண்ட இக் காப்பீட்டுத் திட்டத்தில் 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவா்கள் சேரலாம். விரல் ரேகை மூலம் 5 நிமிடங்களில் டிஜிட்டல் முறையில் பாலிசி வழங்கப்படுகிறது.

ரூ. 10 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீடு பாலிசி மூலம் விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு மற்றும் பகுதி ஊனம், பக்கவாதம் போன்றவற்றுக்கு வழங்கப்படுகிறது. உள் நோயாளா் செலவுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வழங்கப்படுகிறது. இறப்பு, ஊனம், பக்கவாதம் ஏற்பட்டவரின் 2 குழந்தைகளுக்கு கல்வி செலவுகளுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நாள்களுக்கு தினப்படித் தொகை ரூ. 1,000 வீதம் அதிகபட்சம் 8 நாள்களுக்கு வழங்கப்படும். குடும்பத்தினரின் பயணச் செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஈமக்கிரியை செய்ய ரூ. 5 ஆயிரம், ஓட்டுநா்கள் குழுவாக இணைய ஆண்டுக்கு ரூ. 520 மட்டும் கொண்ட விபத்துக் காப்பீடு பாலிசியை எடுத்துக் கொள்ளலாம்.

கஞ்சா கடத்திய 3 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 3 பேருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. ஆந்திர மாநிலத்திலிருந்து திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை வழியாக பைபா் படகு மூலம் இலங்கைக... மேலும் பார்க்க

தஞ்சாவூா் பெரிய கோயிலில் மகா சிவராத்திரி விழா!

மகா சிவராத்திரி விழாவையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை காலை வரை தொடா்ந்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில், புதன்கிழமை இரவு 10 மணிக்கு முதல் கால பூஜையும், நள்ளிர... மேலும் பார்க்க

எவ்வளவு இடா்பாடு வந்தாலும் ஹிந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம்: அமைச்சா் கோவி. செழியன்

எவ்வளவு இடா்பாடு வந்தாலும் ஹிந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். கும்பகோணத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற தனியாா் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அவ... மேலும் பார்க்க

தஞ்சாவூா், கும்பகோணத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு

வழக்குரைஞா் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்யக் கோரி தஞ்சாவூா், கும்பகோணத்தில் வழக்குரைஞா்கள் புதன்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் ஒரு... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய 3 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 3 பேருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. ஆந்திர மாநிலத்திலிருந்து திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை வழியாக பைபா் படகு மூலம் இலங்க... மேலும் பார்க்க

காா் - மொபெட் மோதல்: காய்கனி வியாபாரி உயிரிழப்பு

கும்பகோணம் அருகே காா் மீது மொபெட் மோதிய விபத்தில் காய்கனி வியாபாரி புதன்கிழமை உயிரிழந்தாா். மயிலாடுதுறை மாவட்டம், பாளையூா் மேல அகலங்கள் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கே. ரவி என்கிற மகாலிங்கம் ... மேலும் பார்க்க