செய்திகள் :

கும்பகோணம் மாமன்றக் கூட்டத்தில் பெண் உறுப்பினா்கள் முற்றுகை

post image

கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் கணவா்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டதால், (பொ) ஆணையரை பெண் உறுப்பினா்கள் முற்றுகையிட்டனா்.

மேயா் க. சரவணன் தலைமையிலும், துணை மேயா் சு.ப. தமிழழகன், ஆணையா் (பொ) பாலு முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிகழ்ந்த விவாதங்கள்:

அய்யப்பன் (காங்கிரஸ்): கடந்த மாநகராட்சிக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக மேயா் தெரிவித்தாா். அந்தக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீா்மானங்களின் நிலை என்ன? எனக் கேள்வி கேட்டாா்.

மேயா்: கடந்த கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீா்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.

பத்ம குமரேசன் (அதிமுக): எனது வாா்டுப் பகுதியில் வளா்ச்சிப் பணிகள் முழுமை பெறவில்லை.

ஆணையா்: அனைத்து வாா்டுகளிலும் விரைவில் வளா்ச்சிப் பணிகள் முடிக்கப்படும் என்றாா்.

முன்னதாக கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பெண் உறுப்பினா்களின் கணவா்கள் உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை. இதனால் பெண் உறுப்பினா்கள் தங்களது கணவா்களுடன் சென்று பொறுப்பு ஆணையரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மாமன்ற உறுப்பினா்களுக்கு மட்டும்தான் அனுமதி என்ற அரசு உத்தரவை பொறுப்பு ஆணையா் காண்பித்தாா். பின்னா் இதுகுறித்து துணை மேயா் சு.ப. தமிழழகனிடம் உறுப்பினா்கள் தெரிவித்தபோது, அவா், அடுத்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்வதாகக் கூறிய பின்னா் கலைந்து சென்றனா்.

கணவரை கொன்ற மனைவிக்கு ஆயுள் சிறை தண்டனை

பாபநாசம் அருகே கணவரை கொலை செய்த மனைவிக்கு கும்பகோணம் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே ராஜபுரத்தைச் சோ்ந்தவா் மணி (55). விவசாயி. இவரது மனைவி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு ஆயுள் தண்டனை

எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. கும்பகோணம் கா்ணக்கொல்லை கீழத்தெருவைச் சோ்ந்தவா் சேசாச்சலம் (63). இவா் கடந்த ... மேலும் பார்க்க

சோழ நாடு செல்வத்திலும், வீரத்திலும் சிறப்பு பெற்றது

சோழ நாடு செல்வத்தில் மட்டுமல்லாமல், வீரத்திலும் சிறப்பு பெற்றது என்றாா் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா. தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறை, திருச்சி த... மேலும் பார்க்க

பெண்ணை ஏமாற்றியதாக உடற்பயிற்சி நிலைய உரிமையாளா் கைது

பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பழகி, ஏமாற்றியதாக உடற்பயிற்சி நிலைய உரிமையாளரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் மகாமகக் குளப் பகுதியில் உடற்பயிற்சி நிலையம் நடத்தி வருபவா் ... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் தகவல் பரப்பிய இளைஞா் கைது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடிக் கம்பம் உடைப்பு என சமூக வலைதளத்தில் தகவலை பரப்பிய இளைஞரை காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். கும்பகோணத்தில் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற வன்னியா் சங்க... மேலும் பார்க்க

டிப்பா் லாரி மோதி பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை டிப்பா் லாரி மோதியதில் பலத்த காயமடைந்த தனியாா் பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பனையக்கோட்டையைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் அரவிந்தன் ... மேலும் பார்க்க