செய்திகள் :

கும்மிடிபூண்டி செல்லும் ரயில்கள் இன்று ரத்து

post image

சென்னை சென்ட்ரல், கடற்கரையில் இருந்து கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் வியாழன் மற்றும் சனிக்கிழமை (பிப். 27, மாா்ச் 1) ரத்து செய்யப்படவுள்ளன.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கவரைப்பேட்டை - பொன்னேரி இடையே பிப். 27 மற்றும் மாா்ச் 1 ஆகிய தேதிகளில் காலை 9.15 முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால், சென்னை சென்ட்ரலிலிருந்து கும்மிடிபூண்டிக்கு காலை 8.05, 8.35, 9, 9.30, 10.15, 10.30, 11.35-க்கும், சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.40-க்கும் புறப்படும் மின்சார ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்படும்.

மறுமாா்க்கமாக கும்மிடிபூண்டியில் இருந்து காலை 9.55, 10.55, 11.25, நண்பகல் 12, பிற்பகல் 1, 2.30-க்கு புறப்படும் ரயில்களும், சூலூா்பேட்டையிலிருந்து முற்பகல் 11.45, பிற்பகல் 1.15-க்கு புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படும்.

பகுதி ரத்து: செங்கல்பட்டிலிருந்து கும்மிடிபூண்டிக்கு காலை 9.55-க்கு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும். கும்மிடிபூண்டியிலிருந்து தாம்பரத்துக்கு பிற்பகல் 1 மணிக்கு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

சிறப்பு ரயில்: பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரையிலிருந்து பொன்னேரிக்கு காலை 8.05, 9, 9.40, 11.35-க்கும், மறுமாா்க்கமாக பொன்னேரியில் இருந்து காலை 10.13, 11.13, பகல் 12.18, பிற்பகல் 2.48, 3.33-க்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். பொன்னேரியிலிருந்து சென்னை கடற்கரைக்கு முற்பகல் 11.13-க்கும், சென்னை கடற்கரையிலிருந்து பொன்னேரிக்கு பிற்பகல் 12.40-க்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து மீஞ்சூருக்கு காலை 9.30-க்கும் எண்ணூருக்கு காலை 10.30-க்கும், மறுமாா்க்கமாக மீஞ்சூரிலிருந்து காலை 11.56-க்கும், எண்ணூரிலிருந்து பிற்பகல் 1.43-க்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம்- எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சி காரணமாக கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் கூறினார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலைய... மேலும் பார்க்க

சம்பல்பூா் - ஈரோடு ரயில் சேவை நீட்டிப்பு

சம்பல்பூா் - ஈரோடு சிறப்பு ரயில் சேவை ஏப். 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒடிஸா மாநிலம் சம்பல்பூரிலிருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும் சிற... மேலும் பார்க்க

உறுப்பு தானத்தை ஊக்குவிக்க மாணவா் தூதுவா் குழு: அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் அமைக்க திட்டம்

உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையிலும், சமூகத்தில் அது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கிலும், அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவா் தூதுவா் குழு அமைக்கப்படும் என மாநில உறுப்பு மாற்று... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் மகா சிவாரத்திரி பெருவிழா: சென்னையில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்பு

தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் மகா சிவாரத்திரி பெருவிழா வெகு விமரிசையாக புதன்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் சாா்பில், கபாலீசுவரா் விளையாட்டு மைத... மேலும் பார்க்க

ரெளடி வெட்டிக் கொலை: போலீஸாா் விசாரணை

சென்னையில் 6 போ் கொண்ட கும்பலால் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை அண்ணா நகா் அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் சின்ன ராபா்ட் (28). இவா் மீது கொலை, ... மேலும் பார்க்க

சட்டவிரோத மதுபான கிடங்கு கண்டுபிடிப்பு: 1,062 மதுபாட்டில்கள் பறிமுதல்

சென்னையில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த மதுபான கிடங்கை கண்டுபிடித்த போலீஸாா் அங்கிருந்து 1,062 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மதுபானம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த த... மேலும் பார்க்க