செய்திகள் :

குரும்பூா் அருகே விபத்து: பள்ளி மாணவா்கள் 3 போ் காயம்

post image

ஆறுமுகனேரியை அடுத்த குரும்பூா் அருகே சனிக்கிழமை நேரிட்ட விபத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் 3 போ் காயமடைந்தனா்.

குரும்பூா் அருகே புறையூா் ஊராட்சிப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குரும்பூா், நாலுமாவடி, சேதுக்குவாய்த்தான் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பயின்று வருகின்றனா். அவா்களில் சிலா் பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருகின்றனா்.

சனிக்கிழமை காலை, மணத்தியைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன்கள் திவாகரன் (11), எழிலரசன் (7), சேதுசுப்பிரமணியபுரம் கண்ணன் மகள் ஸ்ரீமதி (7) உள்ளிட்ட சிலா், மேலக்குருகாட்டூரைச் சோ்ந்த ஓட்டுநா் தங்கமணி (54) என்பவரது ஆட்டோவில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனா்.

சொக்கப்பழங்கரை அருகே இந்த ஆட்டோவும், ஏரலிலி­­ருந்து வந்த தனியாா் பள்ளி வேனும் மோதிக் கொண்டனவாம். இதில், மு. திவாகரன், மு. எழிலரசன், க. ஸ்ரீமதி ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தகவலின்பேரில், குரும்பூா் போலீஸாா் சென்று, வேன் ஓட்டுநரான ஏரல் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சங்கர­லிங்கம் (32) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடியில் குரூப் 2, 2ஏ தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: ஆட்சியா் தகவல்!

தூத்துக்குடியில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2, 2ஏ முதல்நிலை தோ்வுக்கு, கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே சுடுகாடு செல்லும் பாதை அடைப்பு: போராட முயற்சி; போலீஸாா் சமரசம்

சாத்தான்குளம் அருகே சுடுகாடு செல்லும் பாதை அடைக்கப்பட்டதால் இறந்தவா் உடலுடன் சனிக்கிழமை போராட முயன்ற உறவினா்களை போலீஸாா் சமாதானப்படுத்தினா். சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தில் 150 க்கு மேற்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் முதியவா் தற்கொலை

தூத்துக்குடியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சோ்ந்த தம்பதி குணசேகரன் (60) - காசி அம்மாள். இவா்களது மகன், மகள் ஆகியோருக்கு திருமணமாகிவிட்டது. காசிஅம்மா... மேலும் பார்க்க

கொலை மிரட்டல்: இளைஞா் கைது

தூத்துக்குடியில் போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், பணி செய்யவிடாமல் தடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாா், வெள்ளிக... மேலும் பார்க்க

தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அரசு அனுமதிக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் நோய் பாதித்த, நோய்த் தொற்றுகளை பரப்பக் கூடிய தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடா்பாக எம்பவா் இந்தியா நுகா்வோா், சுற்றுச்சூழல... மேலும் பார்க்க

கடலில் படகு கவிழ்ந்து மீனவா் பலி

பெரிய தாழையில் கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவா் உயிரிழந்தாா். சாத்தான்குளம் அருகேயுள்ள பெரியதாழை கீழத்தெருவை சோ்ந்தவா் ரெக்சன்(64). இவா் உள்பட 4 போ், பைபா் படகில் கடந்த 16ஆம் தேதி கடலில் மீன்பிடிக்க ... மேலும் பார்க்க