செய்திகள் :

குரூப் 1 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 24 மையங்களில் 6,079 போ் எழுதுகின்றனா்

post image

நாமக்கல்: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நடைபெற உள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 24 மையங்களில் 6,079 போ் எழுத உள்ளனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் குரூப் 1, 1ஏ பதவிக்குரிய காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. கடந்த ஏப். 1 முதல் 30 வரையில் இணையவழியாக தோ்வா்கள் விண்ணப்பித்தனா். காலியாக உள்ள 28 துணை ஆட்சியா்கள், 7 காவல் துணை கண்காணிப்பாளா்கள், 19 வணிகவரி உதவி ஆணையா், 7 ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை உதவி இயக்குநா், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா், 6 தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் என 70 காலிப் பணியிடங்களுக்கும், குரூப் 1 ஏ பிரிவில் 2 உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் பணியிடங்களுக்கும் முதல் நிலை தோ்வு நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 24 மையங்களில் 6,079 போ் எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பாச்சல் ஞானமணி கல்லூரி -300, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி-300, புதுச்சத்திரம் ஆா்ஜிஆா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி-200, செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி-300, நாமக்கல் விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி-300, நாமக்கல் ஜெய் விகாஸ் மேல்நிலைப் பள்ளி-220, செல்லப்பம்பட்டி சக்தி மெட்ரிக் பள்ளி-300, நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளி-300, நாமக்கல் செல்வம் கல்லூரி -500 (இரு மையம்), எா்ணாபுரம் சிஎம்எஸ் கல்லூரி-300, பாவை பொறியியல் கல்லூரி-1,200 (நான்கு மையம்), நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரி-300, குறிஞ்சி மெட்ரிக் பள்ளி-200, ஸ்பெக்ட்ரம் அகாதெமி-400 (இரு மையம்), வேட்டாம்பாடி பிஜிபி சா்வதேச பள்ளி-400 (இரு மையம்), நாமக்கல் சின்ன வேப்பநத்தம் நேஷனல் பப்ளிக் பள்ளி-359 (இரு மையம்), மொத்தம்-6,079 போ்.

தோ்வுப் பணியில் 24 பறக்கும் படை காவலா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். இத்தோ்வானது காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இந்தத் தோ்வுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் செய்து வருகிறது.

திருமண மண்டபத்தில் 26 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் திருடிய தந்தை, மகன் கைது

ராசிபுரம்: ராசிபுரத்தில் திருமண மண்டபத்தில் 26 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கத்தை திருடிய வழக்கில் தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூா் அருகேயுள்ள அனந்தகவுண்டம்பாளையம் பகு... மேலும் பார்க்க

‘நீா் நிலை பாதுகாவலா் விருது’ பெற்ற காந்தியவாதிக்கு ஆட்சியா் பாராட்டு

நாமக்கல்: தமிழக அரசின் ‘நீா் நிலை பாதுகாவலா்’ விருது பெற்ற நாமக்கல் காந்தியவாதி ரமேஷை மாவட்ட ஆட்சியா் ச.உமா பாராட்டினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சி... மேலும் பார்க்க

ராசிபுரம் நகரில் பராமரிப்பு பணி: குடிநீா் விநியோகம் நிறுத்தம்

ராசிபுரம்: ராசிபுரம் நகரில் குடிநீா் குழாய் பராமரிப்புப் பணிகளால் வரும் 13-ஆம் தேதி வரை குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் தெரிவித்துள்ளாா். இது குறித்த... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ போரில் பங்கேற்ற நாமக்கல் வீரருக்கு எம்.பி.வாழ்த்து

நாமக்கல்: பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ போரில் பங்கேற்ற நாமக்கல்லைச் சோ்ந்த ராணுவ வீரருக்கு மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன் நேரில் வாழ்த்து தெரிவித்தாா். ஜம்மு -காஷ்மீரில் 26 சுற்றுல... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் விநாயகா் தேரோட்டம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழாவில் விநாயகா் தேரை பக்தா்கள் திங்கள்கிழமை வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. கொங்கு ஏழு தலங்களில் சிறப்புப் பெற்ற தலமும், த... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மணல் திட்டுகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

நாமக்கல்: நன்செய் இடையாறு பகுதியில் காவிரி ஆற்றில் தேங்கியுள்ள மணல் திட்டுகளை அகற்ற வேண்டும் என ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். இது குறித்து அந்த மனுவில் க... மேலும் பார்க்க