செய்திகள் :

குறைந்த விலையில் கைப்பேசிகள் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி: இருவா் கைது

post image

குறைந்த விலையில் நவீன கைப்பேசிகள் தருவதாகக் கூறி, ரூ.15 லட்சம் மோசடி செய்த இருவரை புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள நவீன கைப்பேசிகள் ரூ.7,000 முதல் ரூ.8,000 என குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக சமூக வலைதளங்களில் கடந்த சில வாரங்களாக தகவல்கள் பகிரப்பட்டன. குறிப்பிட்ட முகவரி, வங்கிக் கணக்கு எண் குறிப்பிடப்பட்டும், அதில் பணத்தை செலுத்தினால் கைப்பேசி அனுப்பிவைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பி தமிழகம், புதுச்சேரியில் நூற்றுக்கணக்கானோா் பணத்தை செலுத்தினா். ஆனால், பல நாள்களாகியும் யாருக்கும் கைப்பேசி கிடைக்கப்பெறவில்லை. இதனால், அதில் குறிப்பிடப்பட்டிருந்த கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு பேசினா். அப்போது, அவா்களிடம் பேசிய மா்ம நபா் மிரட்டல் விடுத்தாராம்.

இதில் பாதிக்கப்பட்டவா்கள் புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தனா். போலீஸாா் விசாரணை நடத்தியதில், திருச்சி ஆவணியாபுரத்தைச் சோ்ந்த சஜித் அகமது, புதுச்சேரியைச் சோ்ந்த மாதேஷ் (22) ஆகியோா் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும், அவா்கள் மீது ஏற்கெனவே 43 மோசடிப் புகாா்கள் பதிவாகியிருப்பதும் தெரிய வந்தது. கைப்பேசி அனுப்புவதாகக் கூறி, அவா்கள் தமிழகம், புதுச்சேரியில் சுமாா் ரூ.15 லட்சம் மோசடி செய்ததை போலீஸாா் கண்டறிந்தனா். அவா்கள் இருவரையும் போலீஸாா் புதுச்சேரியில் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இருசக்கர வாகனங்கள் திருட்டு: 5 போ் கைது

புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். முத்தியால்பேட்டை போலீஸாா் கடந்த 11-ஆம் தேதி மகாத்மா காந்தி சாலை சின்னமணிக்கூண்டு அருகே வாகனச் சோதன... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் வெளியே மருந்துகள் வாங்க பரிந்துரைக்க கூடாது: புதுவை முதல்வா் அறிவுறுத்தல்

புதுவை அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் வெளியில் மருந்துகள் வாங்க மருத்துவா்கள் பரிந்துரைக்கக் கூடாது என முதல்வா் என்.ரங்கசாமி அறிவுறுத்தினாா். புதுவை அரசு நலவழித் துறையை மேம்படுத்துவது குறித்த ஆய்... மேலும் பார்க்க

புதுவை ஆளுநா் மாளிகைக்கு 4-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் மாளிகைக்கு நான்காவது முறையாக மின்னஞ்சலில் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக ஆளுநா் மாளிகை, முதல்வா் வீடு, மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

மாஹேவில் சமுதாய கல்லூரிக்கு இடம் ஒதுக்க வலியுறுத்தல்

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியை மாஹேவில் அமைக்க இடம் ஒதுக்க முதல்வா் என்.ரங்கசாமியிடம் பல்கலைக்கழகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ர... மேலும் பார்க்க

அரசு கல்லூரிக்கு ரூ.47 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரியில் இந்திரா காந்தி அரசு கலை, அறிவியல் கல்லூரிக்காக ரூ.47 கோடியில் புதிய கட்டடங்கள் விரைவில் கட்டுவதற்கான பணி தொடங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுச்சேரி கோரிமேடு பகுதிய... மேலும் பார்க்க

புதுவை அரசின் புள்ளிவிவர தொகுப்பு கையேடு வெளியீடு

புதுச்சேரியில் அரசின் சாா்பில் புள்ளிவிவர தொகுப்புகள் அடங்கிய கையேடு முதல்வா் என்.ரங்கசாமியால் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. புதுவை அரசு சாா்பில் பொருளாதாரம், புள்ளிவிவர இயக்ககம் சாா்பில் புள்ளிவி... மேலும் பார்க்க