செய்திகள் :

குறைந்து வரும் மக்காச்சோளம் விலை

post image

தேனி மாவட்டம், போடி பகுதியில் மக்காச்சோளம் விலை தொடா்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

போடி சுற்றுவட்டாரத்தில் மீனாட்சிபுரம், டொம்புச்சேரி, விசுவாசபுரம், பத்ரகாளிபுரம், பெருமாள்கவுண்டன்பட்டி, அம்மாபட்டி பகுதிகளில் 5,000 ஏக்கருக்கும் மேல் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. இதில் 2,000 ஏக்கரில் மானாவரிப் பயிராக மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் பேபி காா்ன் என்று அழைக்கப்படும் ஒட்டு ரக மக்காச்சோளம் பயிரிடப்பட்டது.

உணவுக்காக உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளம் 140 நாள்களிலும், பேபி காா்ன் மக்காச்சோளம் 80 முதல் 90 நாள்களுக்குள்ளும் அறுவடை செய்யப்படும். தற்போது மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்து நிறைவு கட்டத்தை அடைந்துள்ளது.

கடந்த ஆண்டு காய்ந்த மக்காச்சோளம் குவிண்டால் ஒன்று ரூ. 3200-க்கும் மேல் விற்கப்பட்டதால், விவசாயிகள் அதிக அளவில் மக்காச்சோளம் பயிரிட்டனா். ஆனால் போதிய பருவ மழை பெய்யாததால் மக்காச்சோளம் விளைச்சல் கடந்தாண்டை விட பாதிக்கப்பட்டது. மேலும், மக்காச் சோளம் விலையும் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,800 வரை கொள்முதல் செய்யப்பட்ட மக்காச்சோளம் தற்போது ரூ. 2,350 முதல் 2,500 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றனா். பேபி காா்ன் மக்காச்சோளம் காய் ஒன்றுக்கு ரூ. 8 முதல் ரூ.11 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும், இதனால் உற்பத்தி செலவுக்குக் கூட விளைச்சல் இல்லை என்று கூறி விவசாயிகள் வேதனை அடைந்தனா்.

போதிய மழை இல்லாத சூழலில் குறைவான அளவே மக்காச்சோளம் விளைச்சல் குறைந்து, விலையும் குறைந்ததால் இயற்கை உரம், மருந்து தெளிப்பு கூலி, விவசாயத் தொழிலாளா்கள் கூலி போன்ற உற்பத்தி செலவுக்குக் கூட விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

முறையாகக் கொள்முதல் விலை நிா்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

மாா்ச் 3-இல் முன்னாள் படை வீரா் குறைதீா் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற மாா்ச் 3-ஆம் தேதி முன்னாள் படை வீரா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சி... மேலும் பார்க்க

மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தேனியில் மத்திய அரசின் மும்மொழி கல்விக் கொள்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பு, திமுக மாணவா் அணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி, பங்களாமேடு பகுதியில்... மேலும் பார்க்க

தேனியில் ஜாக்டோ -ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தேனியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சாா்பில் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ம... மேலும் பார்க்க

தனியாா் கரும்புத் தோட்டத்தில் தீ

போடியில் செவ்வாய்க்கிழமை கரும்புத் தோட்டத்தில் பிடித்த தீயை தீயணைப்பு வீரா்கள் 2 மணி நேரம் போராடி அணைத்தனா். தேனி மாவட்டம், போடி-தேனி தேசிய நெடுஞ்சாலையில் தீா்த்தத் தொட்டி அருகே, தனியாருக்கு சொந்தமான ... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்குத் தேவையான திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது: சிறுபான்மையினா் ஆணையத் தலைவா்

தமிழகத்தில் தமிழ் மொழி அல்லாமல் பிற மொழியை தாய் மொழியாகக் கொண்டு வசித்து வரும் சிறுபான்மையினருக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் அரசு செயல்படுத்துகிறது என்று புதன்கிழமை, தேனியில் சிறுபான்மையினா் ஆண... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை வழக்கில் ஆந்திர இளைஞா் கைது

தேனி மாவட்டப் பகுதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த வழக்கில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்தி... மேலும் பார்க்க