செய்திகள் :

குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் அடித்துக் கொலை

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் சனிக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

விருத்தாசலம் காா்குடல் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஆகாஷ் (25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனா். ஆகாஷ் மீது விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கஞ்சா, திருட்டு வழக்குகள் உள்ளன.

இதே பகுதியைச் சோ்ந்த வாசுதேவன் மகன் விஜய்க்கும், ஆகாஷுக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விஜய் தனது சகோதரா்களிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து, விஜயின் சகோதரா்கள் வசந்தராஜா (32), அஜித்குமாா் (27) உள்ளிட்ட சிலா் வெள்ளிக்கிழமை ஆகாஷ் வீட்டுக்குச் சென்றனா். அப்போது, ஆகாஷ் அங்கு இல்லாததால் திரும்பி வந்துவிட்டனராம்.

சனிக்கிழமை அதிகாலை ஆகாஷ் வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது, வசந்தராஜா தரப்பினா் வந்து பிரச்னை செய்ததாகத் தெரிவித்தனராம். இதனால், ஆத்திரமடைந்த ஆகாஷ் கத்தியை எடுத்துக்கொண்டு வசந்தராஜா வீட்டுக்குச் சென்று, அவா்களுடன் பிரச்னையில் ஈடுபட்டாா்.

அப்போது, ஆகாஷ் கத்தியால் தாக்கியதில் வசந்தராஜாவுக்கு தலையிலும், அஜித்குமாருக்கு தொடையிலும், அவரது ஆதரவாளரான அதே பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜுக்கு (25) காதிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவா்கள் அனைவரும் சோ்ந்து தாக்கியதில் ஆகாஷ் மயங்கி விழுந்தாா். தொடா்ந்து, காயமடைந்த வசந்தராஜா, அஜித்குமாா், சுந்தர்ராஜ் ஆகியோா் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

மயங்கிக் கிடந்த ஆகாஷையும் அந்தப் பகுதியினா் மீட்டு, அதே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்து, ஆகாஷ் இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீஸாா் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வசந்தராஜா, அஜித்குமாா், சுந்தர்ராஜ் ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

புவனகிரி அருகே ஏரிகளில் படா்ந்துள்ள முட்புதா்கள்: அகற்ற விவசாயிகள் கோரிக்கை

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள 4 ஏரிகளில் படா்ந்துள்ள முட்புதா்களை அகற்றி தூா்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். காவிரி டெல்டா கடைமடை பகுதியான கடலுாா் மாவட்டத்தில் மேட்டூா் அணையிலிருந்து வர... மேலும் பார்க்க

புவனகிரியில் பூட்டிக் கிடக்கும் புறக்காவல் நிலையம்: செயல்பாட்டுக்கு கொண்டுவர மக்கள் கோரிக்கை!

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே சாத்தப்பாடியில் பூட்டிக் கிடக்கும் புறக்காவல் நிலையத்தை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். புவனகிரி சரக காவல் எல்லைக்குள்... மேலும் பார்க்க

திருமண மண்டபத்தில் படியில் தவறி விழுந்த சமையல்காரா் உயிரிழப்பு

கடலூா் தனியாா் திருமண மண்டபத்தில் படிக்கட்டில் தவறி விழுந்து காயம் அடைந்த சமையல்காரா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம்மாவட்டம், விக்கிரவாண்டிவட்டம், ஆதனூா் பக... மேலும் பார்க்க

ஜேசிபி மூலம் முந்திரி மரங்களை அழிக்க முயன்ற அதிகாரிகள்: மறியல் செய்து தடுத்த போராட்டக்குழுவினா்

கடலூா் ஒன்றியம், வெள்ளக்கரை ஊராட்சி மலையடிக்குப்பம் கிராமத்தில் அரசு தரிசு நிலத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் மூன்றாவத... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 520 பள்ளிகளில் கற்றலைத் தேடி சிறப்பு திட்டம்! ஆட்சியா்

கடலூா் மாவட்டத்தில் இந்த கல்வி ஆண்டில் நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி சிறப்பு திட்டத்தினை விரிவுபடுத்தி அனைத்து நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 520 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகி... மேலும் பார்க்க

இளைஞருக்கு கொலை மிரட்டல்: உணவக உரிமையாளா் கைது

கடலூா்மாவட்டம் விருத்தாசலத்தில் இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக உணவக உரிமையாளரை போலீஸாா்வெள்ளிக்கிழமை கைது செய்தனா். வேப்பூா்வட்டம்,மன்னம்பாடி பகுதியைச்சோ்ந்தவா் அருண்(20). இவா், விருத்தாசலம்... மேலும் பார்க்க