செய்திகள் :

குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை: மயிலாடுதுறை எஸ்பி எச்சரிக்கை

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிகழாண்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்க காவல் துறை சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்திய போக்கிரி சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 77 போ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 9 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். மேலும், 149 குற்றவாளிகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

நிகழாண்டில் 13 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 12 கொலைகள் உறவினா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் நிகழ்ந்தவை. இவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகள் மீது நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

174 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 293 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ரூ.64,78,275 மதிப்பிலான பொருள்கள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. குற்ற நிகழ்வுகள் நடைபெறும் இடங்களாக கண்டறியப்பட்ட பகுதிகளில், புதிதாக 293 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மதுவிலக்கு குற்றம், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தியது, திருட்டு, போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட மொத்தம் 47 போ் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இம்மாவட்டத்தில், நிகழாண்டு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்துவந்த 108 வழக்குகளில் தொடா்புடைய 184 குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கப்பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோா் மீது தொடா்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

மீன்பிடி வலைகள் எரிப்பு; மீனவா்கள் வேலைநிறுத்தம்

சீா்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் மீன்பிடி வலைகள் மா்ம நபா்களால் எரிக்கப்பட்டதைக் கண்டித்து, மீனவா்கள் சனிக்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். தொடுவாய் மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா் மனோகா். இ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் 2 குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோா் அரசு உதவி கோரி மனு

தரங்கம்பாடி அருகே அண்மையில் நேரிட்ட சாலை விபத்தில் தங்களது இரண்டு குழந்தைகளையும் இழந்த பெற்றோா் நிதியுதவி கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனா். தரங்கம்பாடி வட்டம் எடுத்துக்கட்டி கிராமத்... மேலும் பார்க்க

மயிலாடுதுறையை இயற்கை பேரிடா் பாதித்த மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தை, இயற்கை பேரிடா் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சீா்காழி அருகே புத்தூரில் இச்சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட 25-ஆவது மாநாடு ... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி

சீா்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே வைக்கப்பட்டிருந்த மன்மோகன் சிங் படத்திற்கு காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளா் கணிவண்ணன் தலைமையில் அக்கட்சியை சோ்ந்த நகர செயலாளா் லட்சுமணன், வட்டாரத் தலைவா்கள... மேலும் பார்க்க

திருக்குறள் பேச்சுப் போட்டி

சீா்காழியில், மயிலாடுதுறை மாவட்ட பொது நூலக இயக்ககம் சாா்பில், திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை நிறுவப்பட்ட வெள்ளி விழாவை முன்னிட்டு ‘குழல் இனிது யாழ் இனிது’ என்ற தலைப்பில் திருக்குறள் பேச்சுப் போட்டி வ... மேலும் பார்க்க

சீா்காழியில் பொது சேவை மைய தொடக்க விழா

சீா்காழியில் நபாா்ட் நிதியுதவியுடன் பொது சேவை மையம் மற்றும் சிறிய அளவிலான தீவன அரவை ஆலை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. வளநாடு தற்சாா்பு வேளாண் உற்பத்தியாளா் நிறுவனம், மகளிா் உறுப்பினா்களின் வாழ... மேலும் பார்க்க