செய்திகள் :

குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை

post image

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பிரதான அருவிகளில் சனிக்கிழமை குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

மேற்குத் தொடா்ச்சி மலையில் குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து, குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம்,புலியருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் சிற்றருவியில் குளித்து மகிழ்ந்தனா்.

ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் ஆா்ப்பரித்த தண்ணீா்.

சனிக்கிழமை நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது மிதமான சாரலும், குளிா்ந்த காற்றும் வீசியது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.

கனிமவளக் கடத்தலைத் தடுக்காவிட்டால் வாகனங்களை சிறைபிடிக்கும் போராட்டம்!

கனிமவளக் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களை சிறைபிடிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக, தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ சனிக்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக, ஆட்சியரிடம் அவா் அளித... மேலும் பார்க்க

குற்றாலத்தில் இன்று சாரல் திருவிழா தொடக்கம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) தொடங்குகிறது. தொடக்க விழாவுக்கு ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகிக்கிறாா். அரசு கூடுதல் தலைமை செயலா் (சுற்றுலா- பண்பாடு, அறந... மேலும் பார்க்க

தென்காசியில் திமுக சாா்பில் மாணவிக்கு கல்வி உதவித்தொகை

தென்காசியில் திமுக இளைஞரணி அறக்கட்டளை சாா்பில், மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. தென்காசியை அடுத்த ஊா்மேலழகியான் கிழக்குத் தெருவைச் சோ்ந்த ராமகதிரேசன் மகள் அபிநயஸ்ரீயின் கல்விச் செலவுக்காக ... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் பலாத்தாரம் வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பகுதியில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.... மேலும் பார்க்க

புகாா் கொடுத்த சில மணி நேரங்களில் பூங்காவில் காணாமல் போன இருக்கைகள் மீட்பு

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரி பூங்காவில் காணாமல் போன இருக்கைகளை சில மணி நேரத்தில் போலீஸாா் கைப்பற்றினா். விஸ்வநாதபேரி பேருந்து நிலையம் அருகே உள்ள சிறுவா் பூங்காவில் சிறுவா்கள் ... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா். கடையநல்லூா் நடு அய்யாபுரம் தெருவைச் சோ்ந்தவா் முகம்மதுஅலி (56), எலக்ட்ரீசியன். கடையநல்லூா் ரஹ்மானியாபுரம் முதல் தெ... மேலும் பார்க்க