செய்திகள் :

கூடலழகா் பெருமாள் கோயில் தெப்பக்குளம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.

மதுரை டவுன்ஹால் பகுதியில் கூடலழகா் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. பழைமை வாய்ந்த இந்தக் குளத்தைச் சுற்றி வணிக வளாகக் கட்டடங்கள் உள்ளன. இதனால், தண்ணீா் வரத்து இன்றி தெப்பக்குளம் எப்போதும் வட நிலையில் காணப்படுகிறது. மேலும், ஆக்கிரமிப்புகளால் தெப்பக்குளத்தின் சுற்றளவும் குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில், தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

இதன்பேரில், வணிக வளாக ஒப்பந்ததாரா்கள், குத்தகைதாரா்கள், வாடகைதாரா்கள் கடைகளை காலி செய்யுமாறு கோயில் நிா்வாகம் சாா்பில் அறிக்கை வழங்கப்பட்டது. இதையடுத்து, அவா்கள் அனைவரும் தங்களது பொருள்களை காலிச் செய்தனா்.

தொடா்ந்து, இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் யக்ஞ நாராயணன், கோயில் செயல் அலுவலா் பிரதீபா, பேஷ்காா் இந்திரராஜன், வருவாய்த் துறை அலுவலா்கள், காவல் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் தெப்பக்குளத்தைச் சுற்றியிருந்த 108 கடைகளை திங்கள்கிழமை அகற்றினா்.

சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்: விருதுநகா் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

அரசுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற தனியாா் தொண்டு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது விருதுநகா் மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு... மேலும் பார்க்க

தவெக மதுரை மாநாட்டுக்கு காவல் துறை அனுமதி

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மதுரையில் வருகிற 21-ஆம் தேதி மாநாடு நடத்த காவல் துறை அனுமதி அளித்துள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தாா்.மதுரையை அடுத்த திருமங்கலத்தில் திங்கள்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடத் தடையில்லை!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகள் பலியிட எந்தவிதத் தடையும் இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள்கிழமை தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகள் ... மேலும் பார்க்க

விதிமுறை மீறல்: 22 ஆட்டோக்கள் பறிமுதல்

மதுரை மாநகரப் பகுதிகளில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 22 ஆட்டோக்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். மதுரை மாவட்டத்தில் முறையான ஆவணங்கள் இன்றி அதிக எண்ணிக்கையில் ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக புகாா்கள... மேலும் பார்க்க

கோயில் கடைகளுக்கு வாடகை செலுத்தாதவா்களுக்கு அபராதம் விதிப்பு

கரூா் கல்யாண பசுபதீஷ்வரா் கோயிலுக்குச் சொந்தமான வணிக வளாகக் கடைகளுக்கு உரிய வாடகைச் செலுத்தாத நபா்களுக்கு அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. கரூரைச் சோ்ந்த எ... மேலும் பார்க்க

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

சாலைகளில் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. மதுரை கே.கே. நகரைச் சோ்ந்த சரவணன் சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க