செய்திகள் :

கூட்டணி பற்றி இபிஎஸ் பேச்சு: நயினார் நாகேந்திரன் சொன்ன பதில் என்ன?

post image

கூட்டணி பற்றி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதில் எந்த உள்நோக்கமும் கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

திருவாரூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"2026 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கண்டிப்பாக ஆட்சியமைக்கும். திமுக ஆட்சியை விரட்ட வேண்டும், திமுக ஆட்சி இருக்கக் கூடாது. இதுதான் எங்களுடைய நோக்கம். அமித் ஷாவும் எடப்பாடி பழனிசாமியும் என்ன சொல்கிறார்களோ அதன்படி நாங்கள் கேட்டுக்கொள்வோம். அவர்கள் பேசி முடிவெடுக்கட்டும்.

கூட்டணி ஆட்சி பற்றி எடப்பாடி பழனிசாமி பேசியதில் எந்த உள் நோக்கமோ, உள் அர்த்தமோ இல்லை. அவரை இன்று காலை நான் போனில் தொடர்புகொண்டு பேசினேன். அந்த அர்த்தத்தில் அவர் பேசவில்லை என்று சொன்னார்.

'பாஜகவிடம் அதிமுகவை அடகு வைத்துவிடுவீர்கள், அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும்' என்ற திமுகவின் விமர்சனத்திற்கு இபிஎஸ் பதிலளித்துள்ளார்.

கூட்டணியில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும்" என்று பேசினார்.

TN BJP leader Nainar Nagendran has said that there is no motive in AIADMK General Secretary Edappadi Palaniswami talk about an alliance.

இதையும் படிக்க | நயினார் நாகேந்திரனுக்கு துணை முதல்வர் பதவியா? பாஜகவில் சலசலப்பு!

கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் மோதி விபத்து: 3 பேர் பலி

கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சிக்காரி மேடு என்னும் இடத்தில் சரக்கு வாகனங்கள், அரசு பேர... மேலும் பார்க்க

மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமாரின் கார் !

ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது. இத்தாலியில் ஜிடி 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் அஜித் குமாரும் பங்கேற்றார். இந்த கார் பந்தய... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 22 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று(ஜூலை 20) தமிழகத்தில் நீலகிரி, கோவையில் கனம... மேலும் பார்க்க

தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம்! எங்கே? எப்போது?

தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நாளை(ஜூலை 21) சேலத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால நலனை நோக்கிய தமிழக வெற்றிக்... மேலும் பார்க்க

பாமகவிலிருந்து 3 எம்எல்ஏக்கள் நீக்கம்! - ராமதாஸ் உத்தரவு

பாமகவில் இருந்து சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகிய 3 எம்எல்ஏக்களை தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கறிஞர் பாலுவையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்... மேலும் பார்க்க

வேலூரில் நாய்க்கறி விற்பனை செய்வதாக வதந்தி: பொதுமக்கள் போராட்டம்

வேலூரில் நாய்க்கறி விற்பனை செய்வதாக பரவிய வந்தியைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர், சலவன் பேட்டையைச் சேர்ந்தவர் வடிவேலு (வயது 48). சமூக ஆர்வலர். இவர் வேலூர் பர்மா பஜாரில் ஓட்டல்... மேலும் பார்க்க