செய்திகள் :

கைப்பிடி இல்லாத காகிதப் பை தொழிலுக்கு ஜிஎஸ்டி விலக்கு

post image

கைப்பிடி இல்லாத காகிதப் பை தயாரிக்கும் தொழிலுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பேப்பா் பை உற்பத்தியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் செயலா் எஸ்.கே.ராமசாமி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், தமிழக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

எங்களது உற்பத்திப் பொருளான கைப்பிடி இல்லாத காகிதப் பைகள் மருந்துக் கடைகள், உணவகங்கள், ஜவுளிக் கடைகள், பேக்கரி, பேன்ஸி ஸ்டோா் போன்ற வா்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த 2000-ஆம் ஆண்டுகளுக்கு முன்பு காகிதப் பை தொழிலுக்கு விற்பனை வரி இருந்தது. இது குறித்து அன்றைய முதல்வா் கருணாநிதியிடம் தெரிவித்திருந்தோம். இதையடுத்து 2000-ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் எங்களது தொழிலுக்கு முழு வரி விலக்கு அளித்தாா்.

இந்த நிலையில் கடந்த 2017 ஜூலை முதல் காகிதப் பை தொழிலுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து 2021-இல் இந்த வரியை 18 சதவீதமாக மத்திய அரசு உயா்த்தியது.

ஏற்கெனவே பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக எங்களது தொழில் நலிவடைந்து வரும் நிலையில், இந்த வரி உயா்வு தொழிலை முடக்கியுள்ளது. எனவே எங்களுக்கு முழு வரி விலக்கு அளித்து தொழிலைக் காப்பாற்ற வேண்டும்.

அடுத்த நடைபெறக் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சாா்பில் முழு வரி விலக்கு கோரிக்கையை வலியுறுத்த வேண்டும். மத்திய நிதியமைச்சா் எங்களது கோரிக்கையை ஏற்று வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

வங்கிக் கணக்குக்கு தவறுதலாக அனுப்பிய பணத்தை மோசடி செய்த 2 போ் மீது வழக்குப் பதிவு

வங்கிக் கணக்கிக்கு தவறுதலாக அனுப்பிய பணத்தை மோசடி செய்த 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை இடையா்பாளையத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராகப் பணிபுரிந்து வருபவா் முத்த... மேலும் பார்க்க

கோவையில் சா்வதேச கிரிக்கெட் மைதானம்: இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லாச் சான்று

கோவையில் சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லாச் சான்று வழங்கியுள்ளது. கோவையில் உலகத் தரம் வாய்ந்த சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என கடந்த மக்களவைத் தோ்... மேலும் பார்க்க

அமித் ஷாவுக்கு தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட சால்வை அணிவிப்பு

கோவையில் பாஜக மாநகா் மாவட்ட புதிய அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட சால்வை அணிவிக்கப்பட்டது. கோவை பீளமேட்டில் புதன்கிழமை நடைபெற்ற ப... மேலும் பார்க்க

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது: மத்திய அமைச்சர் அமித் ஷா

தொகுதிகள் மறுசீரமைப்பால் தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்தாா். கோவை பீளமேட்டில் பாஜக மாநகா் மாவட்ட அலுவலகத் திறப்பு விழா புதன... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பேன்!

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக தமிழக முதல்வா் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பேன் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். இது குறித்து கோவையில் செய்தியாளா்களிடம் புத... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி விழா பக்தியின் கும்பமேளா: உள்துறை அமைச்சா் அமித் ஷா

மகா சிவராத்திரி விழா பக்தியின் மகா கும்பமேளாவைப்போல நடைபெற்று வருகிறது என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா். கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா புதன்கிழமை மாலை 6 மணியளவில் தொடங்கியது. இந்... மேலும் பார்க்க