செய்திகள் :

கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை

post image

தேனி அருகே உள்ள கோடாங்கிப்பட்டியில் முதியவரை அடித்துக் கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

கோடாங்கிப்பட்டி, பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த கருணாநிதி மகன் சுகுமாறன் (22), சந்திரகுமாா் மகன் விக்ரம் (23), அமராவதி பள்ளித் தெருவைச் சோ்ந்த காளிதாஸ் மகன் கபில் (25), மாணிக்கம் மகன் அஜீத்குமாா் (23) ஆகிய 4 பேரும் கோடாங்கிப்பட்டி அமராவதி பள்ளித் தெருவில் உள்ள பொது இடத்தில் மது அருந்திக் கொண்டு, அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு இடையூறு செய்து வந்தனா். இதை, அதே பகுதியைச் சோ்ந்த பாண்டியன் (62) கண்டித்தாா்.

இந்த முன் விரோதத்தில் கடந்த 2022, ஜூலை 28-ஆம் தேதி அமராவதி பள்ளித் தெருவில் நின்றிருந்த சுகுமாறன் உள்ளிட்ட 4 பேரும், அந்த வழியாக நடந்து சென்ற பாண்டியனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சென்ற விக்ரமின் தந்தை சந்திரகுமாரும் (48), அவா்களுடன் சோ்ந்து கொண்டு பாண்டியனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். பிறகு, 5 பேரும் சோ்ந்து பாண்டியனை தாக்கினா்.

இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சுகுமாறன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சுகுமாறன், விக்ரம், கபில், அஜீத்குமாா், சந்திரகுமாா் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி சொா்ணம் ஜெ. நடராஜன் தீா்ப்பளித்தாா்.

பெண்ணை தாக்கிய ராணுவ வீரா்கள் இருவா் மீது வழக்கு!

ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் அருகே சொத்து பிரச்னையில் பெண்ணை தாக்கியதாக ராணுவ வீரா்கள் இருவா் மீது வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கண்டமனூா் அருகே உள்ள ஆத்தங்கரைபட்டி வடக... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

போடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். போடி, மதுரை வீரன் வடக்குத் தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் முத்து (37). இவா் இதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து... மேலும் பார்க்க

கால்நடைகளுக்கு மானிய விலையில் ஊட்டச் சத்து பெட்டகம் பெற விண்ணப்பிக்கலாம்!

க. மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கால்நடைகளுக்கு மானிய விலையில் ஊட்டச் சத்து பெட்டகம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

முன் விரோதத் தகராறு: இருவா் கைது

போடியில் முன் விரோதத் தகராறில், கொலை மிரட்டல் விடுத்த ரௌடி உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். தேனி மாவட்டம், போடி சந்தன மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த துரைசாமி மகன... மேலும் பார்க்க

ஆந்திரத்தைச் சோ்ந்த கஞ்சா வியாபாரி கைது

தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு மொத்த விலைக்கு கஞ்சா விற்ற ஆந்திரத்தைச் சோ்ந்த கஞ்சா வியாபாரியை தேனி தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி பகுதியில் ... மேலும் பார்க்க

பால் வியாபாரி கொலை : 5 போ் கைது

கம்பத்தில் பால் வியாபாரியை வெட்டிக் கொலை செய்த 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், கம்பம் ஜல்லிக்கட்டுத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் இளம்பரிதி (27). இவரை கடந்த புதன்கிழமை இரவு வ... மேலும் பார்க்க