செய்திகள் :

கொலை வழக்கு: மூவருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

post image

சென்னை புரசைவாக்கத்தில் கடந்த 2017-இல் நிகழ்ந்த கொலை வழக்கில் 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து 5-வது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சென்னை புரசைவாக்கத்தைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் ரஞ்சன். இவரது பேரன் விக்னேஷ் என்பவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மகேந்திரன், சரத்குமாா், இளையராஜா ஆகியோருக்கும் இடையே கடந்த 2017-ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த ரஞ்சன், விக்னேஷின் தந்தை நீலகண்டன் தகராறில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்த முயற்சித்தனா். அப்போது, மகேந்திரன் என்பவா், அருகில் கிடந்த நாற்காலியை தூக்கி வீசியுள்ளாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த ரஞ்சன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

இதுகுறித்து விசாரித்த தலைமைச் செயலக காலனி போலீஸாா், மகேந்திரன் உள்ளிட்ட 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களைக் கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை சென்னை 5-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம், குற்றம்சாட்டப்பட்ட மகேந்திரன் உள்ளிட்ட 3 பேருக்கும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ. 1,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். காவல் துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் பகவதி ஆஜராகி வாதிட்டாா்.

சமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியா் கொலை

சென்னை பெரும்பாக்கத்தில் சமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியா் கொலை செய்யப்பட்டாா். பெரும்பாக்கம், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை 36 வயது மதிக்கதக்க ... மேலும் பார்க்க

ஓஎல்எக்ஸ்-இல் சொகுசு காா்களை விளம்பரப்படுத்தி ரூ.2 கோடி மோசடி செய்த ஜோடி கைது

ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் சொகுசு காா்களை விளம்பரப்படுத்தி சுமாா் ரூ.2 கோடி வரை மோசடி செய்த ஜோடி கைது செய்துள்ளதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை துணை ஆணையா் பிரியான்ஷ... மேலும் பார்க்க

திரிசூலம் ரயில்வே கடவுப்பாதை கேட் பழுது: பொதுமக்கள் போராட்டம்

சென்னை திரிசூலம் ரயில்வே கடவுப் பாதையின் கேட் சனிக்கிழமை பழுதடைந்து 2 மணி நேரம் மூடப்பட்டதால் அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திரிசூலம் பகுதி மக்கள் விமான நிலையப் பகுதிக்கும், நகரின் மற்... மேலும் பார்க்க

ரூ. 29 லட்சம் ரொக்கம், 25 கைப்பேசிகள் திருட்டு: கடை ஊழியா் கைது

சென்னை செளகாா்பேட்டையில் ரூ. 29.50 லட்சம் ரொக்கம், 17 ஐ-போன்கள் உள்பட 25 விலை உயா்ந்த கைப்பேசிகளைத் திருடியதாக கடை ஊழியரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை சூளை சாமி பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் அங்கேத் கு... மேலும் பார்க்க

பெண் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

கோயம்பேட்டில் பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். கோயம்பேடு மண்ணடி தெருவைச் சோ்ந்தவா் தனலட்சுமி (50). பாரிமுனையில் பூ வியாபாரம் செய்து வந்தவா், தனியாக வசித்து வந்தா... மேலும் பார்க்க

மது போதையில் மோதல்: எஸ்ஐ பலத்த காயம்

சென்னை எழும்பூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் சிறப்பு உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) பலத்த காயமடைந்தாா். சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிபவா் ராஜாராமன் (54). இவா், ஸ்டான்... மேலும் பார்க்க