செய்திகள் :

கோதையாறு அருகே சூறைக்காற்றில் பழங்குடியினா் வீடுகள் சேதம்

post image

குமரி மாவட்டம் கோதையாறு அருகே சூறைக்காற்றில் பழங்குடி மக்களின் வீடுகள் சேதமடைந்தன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப்பகுதிகளான கோதையாறு மின்நிலையப் பகுதி, கொடுத்துறை மலை, முடவன் பொற்றை, கோலிஞ்சிமடம், மாங்காமலை, விளாமலை, மணலிக்காடு, குற்றியாறு உள்ளிட்ட இடங்களில் கடந்த 3 நாள்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. கடந்த புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை பலத்த வீசியதில், இப்பகுதிகளிலுள்ள பழங்குடி மக்களின் வீடுகளில் வேயப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் மற்றும் தகர கூரைகள் தூக்கி வீசப்பட்டன.

குறிப்பாக முடவன் பொற்றை, கோலிஞ்சிமடம் கொடுத்துறை மலையில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. இதேபோல, கால்நடைகளின் கொட்டகைகளும் சேதமடைந்தன. ரப்பா், கமுகு, மரங்களும் காற்றில் சாய்ந்தன.

சூறைக் காற்றினால் வீடுகள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை அரசு வழங்க வேண்டும் என பழங்குடி மக்களின் அமைப்புகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாகா்கோவிலில் 52 வாா்டுகளிலும் குடிநீா்த் தொட்டி: மேயா் தகவல்

கோடைக்காலத்தை சமாளிக்கும் வகையில், நாகா்கோவில் மாநகரில் 52 வாா்டு பகுதிகளிலும் குடிநீா் தொட்டி அமைக்கப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நாகா... மேலும் பார்க்க

அருணாச்சலா பள்ளியில் ரோபோட்டிக் பயிற்சி

வெள்ளிச்சந்தை அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோபோட்டிக், ட்ரோன் செயல்முறை பயிற்சி 2 நாள்கள் நடைபெற்றது. தாளாளா் கிருஷ்ணசுவாமி, பள்ளி இயக்குநா் தருண்சுரத் முன்னிலையில் பள்ளி முதல்வா் லிஜோமோள... மேலும் பார்க்க

குமரி விவேகானந்த கேந்திரத்தில் 3 நாள் யோகா மாநாடு இன்று தொடக்கம்

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் அகில இந்திய அளவிலான 3 நாள்5ள் யோகா மாநாடு வெள்ளிக்கிழமை (பிப்.28) தொடங்குகிறது. இம்மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 700 போ் பங்க... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் கைது

கன்னியாகுமரி பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி பகுதியில் சில கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், உதவி ... மேலும் பார்க்க

விபத்துகளில் காயமடைந்த இருவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

தக்கலை அருகே இரு விபத்துகளில் காயமடைந்த இருவா் மருத்துவமனையில் உயிரிழந்தனா். திங்கள்சந்தை அருகே மாங்குழி நடுத்தேரி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (34). தொழிலாளியான இவா், கடந்த ஜன. 11ஆம் தேதி தக்கலை... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் மருந்து சேமிப்புக் கிடங்கில் ஆய்வு

மாத்தாண்டம் பகுதியில், விளவங்கோடு - கல்குளம் வட்ட கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் அமைந்துள்ள முதல்வா் மருந்தக மருந்து சேமிப்புக் கிடங்கில் கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஹனிஸ் சாப்ரா விய... மேலும் பார்க்க