செய்திகள் :

‘கோமா’ நிலையில் 20 ஆண்டுகள்... சவூதி அரேபிய இளவரசர் இளம் வயதில் காலமானார்!

post image

ரியாத்: சவூதி அரேபியாவின் இளம் வயது இளவரசர் காலெத் பிண் தலால் பிண் அப்துலஸிஸ் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சவூதி மன்னர் பரம்பரையைச் சேர்ந்த மூத்த இளவரசர் கலெத் பிண் தலால் அல் சவூத்தின் மகனான இளவரசர் அல்வாலீத் பின் காலெத் பிண் தலால் பிண் அப்துலஸிஸ் லண்டனில் கடந்த 2005-ஆம் ஆண்டில் நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கினார். லண்டனில் உள்ள ராணுவ கல்லூரியில் பயின்றபோது சாலை விபத்தில் சிக்கிய அவருக்கு மூளையில் படுகாயம் உண்டானது.

இதனையடுத்து, இளவரசர் காலெத் பிண் தலால் பிண் அப்துலஸிஸ் சுமார் 20 ஆண்டுகள் படுத்த படுக்கையில் ‘கோமா’ நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், அவரது உயிர் சனிக்கிழமை(ஜூலை 19) நள்ளிரவு பிரிந்தது. அவருக்கு வயது 36.

மூளையில் படுகாயமடைந்து ரத்தக்கசிவால் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட அவருக்கு இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் சிகிச்சையளித்தும் அவரை இயல்புநிலைக்கு திரும்ப வைக்க முடியவில்லை என்பது துரதிருஷ்டவசமானது.

அவருக்கு ரியாத்திலுள்ள இமாம் துர்க்கி பிண் அப்துல்லா மசூதியில் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 20) இறுதிசடங்கு செய்யப்படுகிறது.

Saudi Arabia's 'Sleeping Prince' Alwaleed bin Khaled bin Talal bin Abdulaziz Al Saud died in the age of 36

ஈரானில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

ஈரானில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அபாடன் சுத்திகரிப்பு நிலையத்தில் பழுதுபார்க்கும் பணியில் இ... மேலும் பார்க்க

பசுபிக் கடலில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ரஷியாவில் சுனாமி எச்சரிக்கை

ரஷியாவின் பசுபிக் கடற்கரையோர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.ரஷியாவின் பசுபிக் கடற்கரையோர பகுதியில் அடுத்தடுத்து 2 கடும் நிலநடு... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் இரண்டே மாதங்களில் 100 குழந்தைகள் உயிரிழப்பு! பருவமழையால் பெரும் பாதிப்பு!

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் அளவுக்கு அதிகமாக பெய்துவரும் பருவமழை காரணமாக ஜூன், ஜூலையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் ஜூன் - செப்டம்பர் வரை, பருவமழையின் தாக... மேலும் பார்க்க

மத்திய கிழக்கு நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

துஷான்பே[தஜிகிஸ்தான்] : மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 20) அதிகாலை வடக்கு ஈரான் பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவா... மேலும் பார்க்க

அருணாசலுக்கு அருகே உலகின் மிகப் பெரிய அணை: கட்டுமானத்தைத் தொடங்கிய சீனா

திபெத்தில் இந்திய எல்லையான அருணாசல பிரதேசத்துக்கு அருகே பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா கட்டும் உலகின் மிகப் பெரிய அணையின் கட்டுமானப் பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன. கட்டுமானப் பணிகளின் தொடக்கமா... மேலும் பார்க்க

உணவு தேடி சென்ற மேலும் 32 பாலஸ்தீனா்கள் சுட்டுக் கொலை

காஸாவின் தெற்கு பகுதியில் உள்ள இரண்டு நிவாரண விநியோக மையங்களில் உணவு பெறச் சென்ற பாலஸ்தீனா்கள் மீது இஸ்ரேல் படைகள் சனிக்கிழமை காலை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 32 போ் உயிரிழந்தனா்; 100-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க