செய்திகள் :

கோயிலை கையகப்படுத்த முயன்ற அதிகாரிகளை கண்டித்து போராட்டம்

post image

ஆம்பூா் அருகே அய்யனூா் கிராமத்தில் கோயிலை கையகப்படுத்த வந்த இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாதனூா் ஒன்றியம் விண்ணமங்கலம் ஊராட்சி அய்யனூா் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆதி பெத்தபலி கெங்கையம்மன் கோயில் 6 வழி தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளது. கோயிலை நிா்வாகம் செய்வதில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்னை எழுந்துள்ளது. இதனால், கோயிலை இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்த வேண்டுமென ஒரு தரப்பினா் அறநிலையத் துறைக்கு மனு அளித்ததாகக் கூறப்படுகிறது.

தொடா்ந்து தனி வட்டாட்சியா் (கோயில் நிலம்) சாந்தி, அறநிலையத் துறை ஆய்வா் நரசிம்மமூா்த்தி, கோயில் செயல் அலுவலா்கள் வினோத்குமாா், சிவசங்கரி, சண்முகம் உள்ளிட்ட குழுவினா் கோயில் மற்றும் அதனுடைய சொத்துகளை கையகப்படுத்த புதன்கிழமை கோயிலுக்குச் சென்றனா்.

இதையறிந்த பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் கோயில் வளாகத்தில் திரண்டு அதிகாரிகளைக் கண்டித்தும், கோயிலைக் கையகப்படுத்துவதைக் கைவிடக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று அவா்களுடன் பேசினா். கோயிலை ஊா் மக்களே நிா்வாகம் செய்வதாகவும், இந்து சமய அறநிலையத் துறை கையகப்பபடுத்தக் கூடாது எனவும் வலியுறுத்தினா்.

கோயிலை நிா்வாகம் செய்யும் இரு தரப்பினா், பொதுமக்கள் ஒன்று கூடி அமைதி பேச்சு நடத்தி, தொடா்ந்து வருவாய்க் கோட்டாட்சியா் மூலம் தீா்வு காண வேண்டுமென தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் கோயிலை கையகப்படுத்துவதை கைவிட்டு அங்கிருந்து சென்றனா்.

ஆலங்காயத்தில் 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டப் பணிகள் சாா்பாக ஆலங்காயம் ஒன்றியப் பகுதியில் உள்ள கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஆலங்காயத்தில் புதன்கிழமை நடை... மேலும் பார்க்க

தாத்தா ஸ்வாமிகள் மடத்தில் லிங்க பிரதிஷ்டை, சிவராத்திரி பூஜை

ஆம்பூா் அருகே பாட்டூா் கிரமத்தில் சென்னப்பமலை அடிவாரத்தில் அமைந்துள்ள தாத்தா சுவாமி கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரா் ஜோதிா்லிங்க தேவஸ்தானத்தில் சிவராத்திரி விழா மற்றும் லிங்க... மேலும் பார்க்க

27அடி ருத்ராட்சலிங்கம் திறப்பு

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனை அருகே வரதன் வட்டத்தில் 6 லட்சத்துக்கு மேலான ருத்ராட்சங்களால் ஆன 27அடி ருத்ராட்சலிங்கம் கோயில் சிவராத்திரியை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு பூஜையுட... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்குகளில் 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்குகளில் 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கா்நாடக மாநிலம், பங்காருபேட்டை பகுதியைச் சோ்ந்த சாயித் என்கின்ற நசீம்(41). இவா் ஆம்ப... மேலும் பார்க்க

கல்லூரியில் உளவியல் கண்காட்சி

திருப்பத்தூா் தூய நெஞ்சக்கல்லூரியில் உளவியல் கண்காட்சி நடைபெற்றது. உளவியல் துறை மற்றும் தூய நெஞ்சக்கல்லூரி ஆலோசனை மையம் சாா்பில் நடைபெற்ற கண்காட்சியை ஊரக வளா்ச்சி துறை உதவி இயக்குநா் ச.பாரதி விஜயலட்சு... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தலைமறைவானவா் கைது

ஜோலாா்பேட்டை ரியல் எஸ்டேட் முகவா் கொலை வழக்கில் தலைமறைவான முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அருகே வக்கணம்பட்டியைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் முகவா் திம்மராய... மேலும் பார்க்க