செய்திகள் :

கோலியைப் போலச் செய்வதை ஷுப்மன் கில் நிறுத்த வேண்டும்: மனோஜ் திவாரி

post image

இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய கேப்டன் ஷுப்மன் கில் முன்னாள் டெஸ்ட் கேப்டன் விராட் கோலியைப் போல் நடந்துகொள்வதை நிறுத்த வேண்டுமென மனோஜ் திவாரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் உள்ளது.

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து வீரரை ஆபசமாகப் பேசியதால் பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் உள்பட இங்கிலாந்து வீரர்கள் அபாரமாக செயல்பட்டு இந்தியாவை வீழ்த்தினார்கள்.

தேவையில்லாமல் பேசுவதால் ஷுப்மன் கில் பேட்டிங் மற்றும் அவரது தலைமைப் பண்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முன்னாள் வீரர் மனோஜ் திவாரி ஸ்போர்ட்ஸ்பூம் டிவியில் கூறியதாவது:

ஆக்ரோஷத்தை வெல்வதில் காட்டுங்கள்

கேப்டன் ஷுப்மன் கில் நடந்துகொள்ளும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை. கடைசி டெஸ்ட்டில் அவர் விராட் கோலி போல நடந்துகொண்டார். அதன் விளையாவாக அவரால் பேட்டிங்கில் சிறப்பாக விளையாட முடியவில்லை.

கேப்டன் ஆனதும் ஷுப்மன் கில் நடததை சரியாக இல்லை. மிகவும் கோபமாக நடந்துகொள்கிறார். அதை கடந்த ஐபிஎல் போட்டிகளில் இருந்தே கவனித்து வருகிறேன்.

கோபமாக நடுவர்களுடன் பேசுகிறார். அது அவருடைய இயல்பும் அல்ல. அவர் அந்தமாதிரி கோபமடைய வேண்டியதில்லை, அதில் அவர் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை.

கில் அவருடைய பாணியில் ஆக்ரோஷமாக இருக்கலாம். அதற்காக அவர் ஆபசமாகப் பேச வேண்டியதில்லை. டெஸ்ட் போட்டிகளில் வெல்வதில் அதைக் காட்டலாம்.

இந்திய கேப்டன் இப்படி பேசக் கூடாது

இந்திய அணி எளிதாக 2-1 என ஆகியிருக்கலாம். அந்தமாதிரியான ஆக்ரோஷம் விளையாட்டுக்கு உதவாது. குறிப்பாக இந்திய அணியின் கேப்டனாக தேவையில்லாதது.

கில் பேசிய வார்த்தைகளில் எனக்கு விருப்பமில்லை. நீங்கள் இந்திய அணியை பிரதிநிதித்துவம் செய்கிறீர்கள்.

முன்னாள் கேப்டன் இப்படி பேசியதால் அதையே இவரும் டிரெண்ட் என நினைத்து செய்கிறார். ஆனால், இதைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும்.

நீங்கள் ஒன்றைப் பயன்படுத்தினால் அது அடுத்த தலைமுறைகளையும் பாதிக்கும் என்றார்.

இரு அணிகளுக்குமான 4-ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை (ஜூலை 23) தொடங்குகிறது.

Tiwary joined the bandwagon of cricketers who claimed that Shubman Gill tried to emulate Virat Kohli's template of captaincy by showing aggression on the field.

ஹர்மன்ப்ரீத் சதம்: தொடரை வெல்ல இங்கிலாந்துக்கு 319 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணி 318 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக முதல்முறையாக டி20 தொடரை இந்திய மகளிரணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியி... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடர்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அபாரம்!

முத்தரப்பு டி20 தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்றையப் போட்டிய... மேலும் பார்க்க

4-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்வார்: ஷுப்மன் கில்

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்வார் என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.இந்தியா - இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடர்: நியூசி.க்கு 135 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா!

முத்தரப்பு டி20 தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது.ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்றை... மேலும் பார்க்க

மான்செஸ்டர் ஆடுகளத்தை பார்வையிட்ட இங்கிலாந்து பயிற்சியாளர், கேப்டன்!

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெறும் மான்செஸ்டர் ஆடுகளத்தை இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பார்வையிட்டனர்.இந்தியா மற்றும் இங்கிலாந்... மேலும் பார்க்க

ஐசிசி பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதலிடம்; 10 இடங்கள் முன்னேறிய தீப்தி சர்மா!

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி இன்று (ஜூலை 22) வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணியின் துணைக... மேலும் பார்க்க