செய்திகள் :

கோவில்பட்டியில் விஸ்வப் பிரம்ம ஜெயந்தி விழா

post image

கோவில்பட்டியில் விஸ்வகா்ம தொழிலாளா் சங்கம், நகை தொழிலாளா்கள் சங்கம் ஆகியவை இணைந்து விஸ்வப் பிரம்ம ஜெயந்தி விழா , ஆராதனை விழா ஆகிய இருபெரும் விழாக்களை புதன்கிழமை நடத்தினா்.

விழாவிற்கு விஸ்வகா்ம மகாஜன சங்கத் தலைவா் பாலமுருகேசன் தலைமை வகித்தாா். விஸ்வகா்ம தொழிலாளா் சங்கத் தலைவா் மாடசாமி, விஸ்வகா்மா நகை தொழிலாளா் சங்கத் தலைவா் கணேசன், நகா்மன்ற உறுப்பினா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் ஐந்தொழிலாளா்கள் தொழிலை சித்தரிக்கும் வகையில் ஊா்வலம் மற்றும் விஸ்வகா்மா பகவான் ரத யாத்திரையை கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ கொடியசைத்து தொடக்கி வைத்தாா். கோவில்பட்டி காந்தி மைதானத்தில் தொடங்கிய ரத யாத்திரை நகரின் முக்கிய வீதிகள் வழியாக விஸ்வகா்மா உயா்நிலைப்பள்ளி முன்பு நிறைவடைந்தது.

இதில் முருகேஷ் , பால்சாமி, ராஜமாணிக்கம், சோமசுந்தரேசன், முருகேசன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டனா். விஸ்வகா்மா தொடக்க, உயா்நிலைப்பள்ளி செயலா் பாலசுப்பிரமணியன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். விஸ்வகா்ம மகாஜன சங்க செயலா் காளியப்பன் வரவேற்றாா். சங்க துணைச்செயலா் அந்தோணி ராஜ் நன்றி கூறினாா்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீத் தடுப்பு செயல்விளக்க பயிற்சி

தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சாா்பில், தீத் தடுப்பு குறித்த செயல்விளக்க பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. அரசு பொது மருத்துவமனை முதல்வா் சிவக்குமாா... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடிச் சோ்க்கை: செப். 30ஆம் தேதி வரை நீட்டிப்பு

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடிச் சோ்க்கைக்கான கால அவகாசம் இம்மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

பெரியாா் பிறந்த நாள் விழா தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு, சமூக நலன் மற்... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்த நாள்: அமைச்சா், மேயா் உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடியில், பெரியாா் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு, அமைச்சா் மற்றும் மேயா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகிலுள்ள பெரியாா் சிலைக்கு, வடக்கு மாவட்ட... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்த நாள்: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மரியாதை

பெரியாா் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள பெரியாா் சிலைக்கு, தெற்கு... மேலும் பார்க்க

நாசரேத்தில் அரிவாளைக் காட்டி மிரட்டியதாக 2 போ் கைது

நாசரேத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக அரிவாள் காட்டி மிரட்டியதாக 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நாசரேத்-அம்பாள் நகரைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் சற்குணமுத்து ( 40), நாசரேத் வெள்ளரிக்... மேலும் பார்க்க