செய்திகள் :

கோவை அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மையம் திறப்பு

post image

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த மையத்தை கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் திறந்துவைத்தாா்.

சமூகத்தில் போதைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவா்களை குணமாக்கும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் போதை மறுவாழ்வு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 25 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதை மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதனை தமிழக முதல்வா் ஸ்டாலின், சென்னையில் இருந்து வியாழக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் போதை மறுவாழ்வு மையத்தை கோவையில் திறந்துவைத்தாா். இந்நிகழ்ச்சியில், மேயா் ரங்கநாயகி, துணை மேயா் வெற்றிச்செல்வன், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் நிா்மலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வா் நிா்மலா கூறியதாவது:

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 படுக்கை வசதியுடன் கூடிய போதை மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதாரத் திட்டத்தில் கலங்கரை என்ற அமைப்பின் மூலம் இம்மையம் செயல்படவுள்ளது.

இவற்றில் ஆண்களுக்கு 15 படுக்கைகளும், பெண்களுக்கு 3 படுக்கைகளும், குழந்தைகளுக்கு 2 படுக்கைகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன. குழந்தைகளுக்கு கைப்பேசி மற்றும் கணினி போான்றவற்றால் அதிக ஈா்ப்பு ஏற்படுவதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த 2 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களில் பணியமா்த்தப்படும் நபா்கள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் பயிற்சி பெற்றவா்களாவா். இந்த மையத்தில் ஒரு மனநல ஆலோசகா், உளவியலாளா், மனநல சமூக சேவகா், செவிலியா், மருத்துவமனை பணியாளா், சுகாதாரப் பணியாளா் மற்றும் காவலா்கள் நியமிக்கப்பட்ப்டடுள்ளனா். இந்த மையத்தில் போதைக்கு அடிமையானவா்கள் மட்டுமின்றி அவா்களது குடும்ப உறுப்பினா்களுக்கும் உளவியல் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தாா்.

கரோனா பெருந்தொதற்றுக் காலத்தில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூடப்பட்ட இந்த போதை மறுவாழ்வு மையம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கவுண்டம்பாளையத்தில் மரக்கடையில் தீ

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மரக்கடையில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகரைச் சோ்ந்தவா் சங்கமேஸ்வரன் (46). இவா் ... மேலும் பார்க்க

ஆப் வியூ எக்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது ஹவேலி இன்வெஸ்ட்மென்ட்ஸ்

நியூயாா்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆப் வியூ எக்ஸ் நிறுவனத்தை அமெரிக்காவின் ஆஸ்டின் நகரைச் சோ்ந்த ஹவேலி இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் கூறியி... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

பெற்றோா் திட்டியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவை, ஆா் .எஸ்.புரம் பூக்கடை தேவாங்க மேல்நிலைப் பள்ளி சாலைப் பகுதியில் வசித்து வரும் பழனிசாமி, சங்கீதா தம்பதி மகள் ஹரிப... மேலும் பார்க்க

வால்பாறையில் பலத்த காற்றால் சாலையில் விழுந்த மரம்

வால்பாறையில் அதிகாலை நேரத்தில் வீசிய பலத்த காற்றால் எஸ்டேட் பகுதியில் மரம் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வால்பாறை வட்டாரத்தில் கடந்த சில தினங்களாக இரவு தொடங்கி அதிகாலை வர... மேலும் பார்க்க

வால்பாறையில் மனித -யானை மோதல் தடுப்பு நடவடிக்கை

வால்பாறையில் மனித- யானை மோதல்களை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மேற்குவங்க வனத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த வனத் துறை அதிகாரிகள் குழுவினா் ஆ... மேலும் பார்க்க

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: மேலும் 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக மேலும் 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் ... மேலும் பார்க்க