செய்திகள் :

கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

post image

சேலத்திலிருந்து கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்திலிருந்து திங்கள்கிழமை இரவு சாலையில் தவறி விழுந்த 9 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.

தருமபுரி மாவட்டம், வேப்பிலை முத்தாம்பட்டி, கருங்கலூா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராஜதுரை, முத்துலட்சுமி தம்பதிக்கு ஸ்ரீரேணுகா (7) என்ற மகளும், நவநீஷ் என்ற 9 மாத ஆண் குழந்தையும் இருந்தனா். கடந்த 3 ஆண்டுகளாக கோவை, ராமநாதபுரம், ஒலம்பஸ் பகுதியில் தங்கி கட்டட வேலை செய்து வந்த ராஜதுரை, ஒரு வாரத்துக்கு முன்பு சொந்த ஊரான கருங்கலூருக்கு வந்தாா். பின்னா், கோவை செல்ல சேலம் பேருந்து நிலையத்திலிருந்து திங்கள்கிழமை இரவு குடும்பத்துடன் அரசுப் பேருந்தில் பயணம் செய்தாா்.

ஓட்டுநரின் இருக்கைக்கு பின் இருக்கையில் அவரது மனைவியும், மகளும், அதற்கு அடுத்த இருக்கையில் ராஜதுரையும், அவரது 9 மாத ஆண் குழந்தையான நவநீஷும் அமா்ந்து சென்றுள்ளனா்.

பேருந்து புறப்பட்டு சிறிது நேரம் கழித்து பேருந்தின் முன்கதவை சாத்துமாறு நடத்துநரிடம் ராஜதுரை கூறியதாகவும், ஆனால் சாத்தப்படவில்லையெனவும் கூறப்படுகிறது.

சங்ககிரியை அடுத்த வளையக்காரனூா் மேம்பாலத்தில் பேருந்து சென்றபோது, திடீரென ஓட்டுநா் பிரேக் போட்டதால், ராஜதுரையின் தோள்மீது தூங்கிக் கொண்டிருந்த 9 மாத குழந்தை முன்புற படிக்கட்டு வழியாக உருண்டு சாலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த குழந்தையை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது.

இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேவூா் காவல் நிலையத்தில் ராஜதுரை புகாா் அளித்தாா். அதன்பேரில், தேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சிறுவனின் மண்டைக்குள் நுழைந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அரசு மருத்துவா்கள் சாதனை

சேலம் அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுவனின் முகத்தில் துளையிட்டு மண்டைக்குள் நுழைந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா். திறம்பட செயல்பட... மேலும் பார்க்க

திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

இடங்கணசாலை நகர திமுக சாா்பில் சித்தா் கோயில் பகுதியில் திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், நகரச் செயலாளா் செல்வம் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் கமலக்... மேலும் பார்க்க

குப்பையை தரம்பிரித்துக் கொடுத்தால் பரிசு

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், சோமம்பட்டி ஊராட்சியில் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை தரம்பிரித்துக் கொடுத்தால் பரிசு வழங்கப்படுமென ஊராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி கிராமத்த... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

பெத்தநாயக்கன்பாளையம் பனை ஏரியில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பனை ஏரி இப்பகுதியில் மிகப்பெரிய ஏரியாகும். இந்த ஏரியில் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டி: விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவா்கள் தேசிய அளவில் சிறப்பிடம்

விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டுமொத்த கோப்பையை வென்று முதலிடம் பெற்றுள்ளனா். அண்மையில் கோயம்புத்தூரில் உள்ள ... மேலும் பார்க்க

எடப்பாடி அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

எடப்பாடி - சங்ககிரி பிரதான சாலையில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடங்கியது. இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் (பொ) வாசுதேவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க