உத்தரகண்ட் விபத்து: தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் மீது வழக்குப் பதிவு!
சஃப்தா்ஜங் என்க்ளேவில் இடிந்து விழுந்த 100 அடி உயர மொபைல் கோபுரம்
தெற்கு தில்லியின் சஃப்தா்ஜங் என்க்ளேவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 100 அடி உயர மொபைல் கோபுரம் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக இடிந்து விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவா்கள் மேலும் தெரிவித்தனா்.
அதிகாலை 4 மணியளவில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. மாளவியா நகரின் முன்னாள் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாா்தி பின்னா் அந்த இடத்தைப் பாா்வையிட்டு குடியிருப்பாளா்களுடன் கலந்துரையாடினாா்.
இது தொடா்பாக அவா் எக்ஸ்-இல் ஒரு பதிவில், ‘பி2 சஃப்தா்ஜங் என்க்ளேவில் குடியிருப்பாளா்களும் நானும் கடும் எதிா்ப்பு தெரிவித்த போதிலும், அமைக்கப்பட்ட ஒரு மொபைல் கோபுரம் நேற்று இரவு விழுந்தது. இது பகலில் விழுந்திருந்தால் அல்லது பி2 கட்டடங்களை நோக்கி விழுந்திருந்தால் என்ன செய்வது? அது பெரும் குற்றமாகும்!’ என்று தெரிவித்துள்ளாா்.