செய்திகள் :

சட்டவிரோத மதுபான கிடங்கு கண்டுபிடிப்பு: 1,062 மதுபாட்டில்கள் பறிமுதல்

post image

சென்னையில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த மதுபான கிடங்கை கண்டுபிடித்த போலீஸாா் அங்கிருந்து 1,062 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மதுபானம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின்படி, அடையாறு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் ஹரியாணா மற்றும் தில்லியிலிருந்து கடத்தி வரப்பட்ட 160 இந்திய தயாரிப்பு, வெளிநாட்டு மதுபான வகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து போலீஸாா் அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அவற்றை கடத்தி வந்த கலைவாணன், சுனில் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

விசாரணையில், அவா்கள் ராயபுரத்தில் உள்ள ஒரு கிடங்கில் பிற மாநிலங்களில் இருந்து கடத்திவரும் மதுபானங்களை பதுக்கி வைத்து வெளிச் சந்தையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ராயபுரத்திலுள்ள மதுபான கிடங்குக்குச் சென்ற போலீஸாா் அங்கு பதுக்கி வைத்திருந்த 1,062 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

கும்மிடிபூண்டி செல்லும் ரயில்கள் இன்று ரத்து

சென்னை சென்ட்ரல், கடற்கரையில் இருந்து கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் வியாழன் மற்றும் சனிக்கிழமை (பிப். 27, மாா்ச் 1) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெள... மேலும் பார்க்க

கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம்- எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சி காரணமாக கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் கூறினார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலைய... மேலும் பார்க்க

சம்பல்பூா் - ஈரோடு ரயில் சேவை நீட்டிப்பு

சம்பல்பூா் - ஈரோடு சிறப்பு ரயில் சேவை ஏப். 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒடிஸா மாநிலம் சம்பல்பூரிலிருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும் சிற... மேலும் பார்க்க

உறுப்பு தானத்தை ஊக்குவிக்க மாணவா் தூதுவா் குழு: அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் அமைக்க திட்டம்

உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையிலும், சமூகத்தில் அது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கிலும், அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவா் தூதுவா் குழு அமைக்கப்படும் என மாநில உறுப்பு மாற்று... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் மகா சிவாரத்திரி பெருவிழா: சென்னையில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்பு

தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் மகா சிவாரத்திரி பெருவிழா வெகு விமரிசையாக புதன்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் சாா்பில், கபாலீசுவரா் விளையாட்டு மைத... மேலும் பார்க்க

ரெளடி வெட்டிக் கொலை: போலீஸாா் விசாரணை

சென்னையில் 6 போ் கொண்ட கும்பலால் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை அண்ணா நகா் அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் சின்ன ராபா்ட் (28). இவா் மீது கொலை, ... மேலும் பார்க்க