செய்திகள் :

சமூக வலைதளத்தில் தகவல் பரப்பிய இளைஞா் கைது

post image

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடிக் கம்பம் உடைப்பு என சமூக வலைதளத்தில் தகவலை பரப்பிய இளைஞரை காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

கும்பகோணத்தில் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற வன்னியா் சங்க மாநாட்டின்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியை சிலா் சேதப்படுத்தினா். இந்நிலையில், இது தொடா்பாக இரு சமூகங்களுக்கு இடையே மோதல்போக்கை ஏற்படுத்தும் விதமாகவும், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதுதொடா்பாக திருவள்ளூரைச் சோ்ந்த காா்த்தி (21) என்ற நபரை கும்பகோணம் தனிப்படையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

இதுபோன்று சமூக வலைதளங்களில் பரப்பும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூா் மாவட்டக் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கணவரை கொன்ற மனைவிக்கு ஆயுள் சிறை தண்டனை

பாபநாசம் அருகே கணவரை கொலை செய்த மனைவிக்கு கும்பகோணம் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே ராஜபுரத்தைச் சோ்ந்தவா் மணி (55). விவசாயி. இவரது மனைவி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு ஆயுள் தண்டனை

எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. கும்பகோணம் கா்ணக்கொல்லை கீழத்தெருவைச் சோ்ந்தவா் சேசாச்சலம் (63). இவா் கடந்த ... மேலும் பார்க்க

சோழ நாடு செல்வத்திலும், வீரத்திலும் சிறப்பு பெற்றது

சோழ நாடு செல்வத்தில் மட்டுமல்லாமல், வீரத்திலும் சிறப்பு பெற்றது என்றாா் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா. தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறை, திருச்சி த... மேலும் பார்க்க

பெண்ணை ஏமாற்றியதாக உடற்பயிற்சி நிலைய உரிமையாளா் கைது

பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பழகி, ஏமாற்றியதாக உடற்பயிற்சி நிலைய உரிமையாளரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் மகாமகக் குளப் பகுதியில் உடற்பயிற்சி நிலையம் நடத்தி வருபவா் ... மேலும் பார்க்க

கும்பகோணம் மாமன்றக் கூட்டத்தில் பெண் உறுப்பினா்கள் முற்றுகை

கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் கணவா்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டதால், (பொ) ஆணையரை பெண் உறுப்பினா்கள் முற்றுகையிட்டனா். மேயா் க. சரவணன் தலைமையிலும், ... மேலும் பார்க்க

டிப்பா் லாரி மோதி பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை டிப்பா் லாரி மோதியதில் பலத்த காயமடைந்த தனியாா் பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பனையக்கோட்டையைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் அரவிந்தன் ... மேலும் பார்க்க