செய்திகள் :

``சர்தார் படேல் மீது மரியாதை இருந்தால், மோடி RSS-ஐ தடைசெய்ய வேண்டும்'' - கார்கே காட்டம்

post image

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாளான இன்று பிரதமர் மோடி குஜராத்தில் இன்று (அக்டோபர் 31) அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

மேலும், தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படும் படேலின் பிறந்த நாள் உரையில், காங்கிரஸ் அவரின் கொள்கைகளை மறந்து சுயநலத்துடன் செயல்பட்டதாக மோடி விமர்சித்தார்.

சர்தார் வல்லபாய் படேல் சிலை - மோடி
சர்தார் வல்லபாய் படேல் சிலை - மோடி

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, ``வெளிப்படையாகச் சொல்கிறேன், ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட வேண்டும். இவை எனது தனிப்பட்ட கருத்துகள்தான்.

இருப்பினும், சர்தார் வல்லபாய் படேலின் கருத்துகளை உண்மையிலேயே மோடி மதிக்கிறார் என்றால், ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்யும் முடிவை அவர் எடுக்க வேண்டும்.

நாட்டிலுள்ள எல்லாத் தவறுகளுக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கும் பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்ஸும்தான் காரணம்" என்று கூறினார்.

மேலும், வல்லபாய் படேல் குறித்துப் பேசிய கார்கே, ``காந்தியின் மரணத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியடைந்த விதத்திற்குப் பிறகு, அவர்களைத் தடை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று சியாமா பிரசாத் முகர்ஜிக்கு படேல் கடிதம் எழுதினார்.

ஆர்.எஸ்.எஸ் உரைகள் விஷம் நிறைந்தவை. காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு அவர்கள் இனிப்புகளை விநியோகித்தனர். இந்தக் கடிதத்தை கோல்வால்கருக்கும் படேல் எழுதினார்" என்று கூறினார்.

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல், 1948-ல் காந்தி மறைவுக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைத் தடை செய்தார்.

அதன்பின்னர், 1975-ல் எமெர்ஜென்சியின்போது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியாலும், 1992-ல் பாபர் மசூதி இடிப்பின்போது அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவாலும் ஆர்.எஸ்.எஸ் தடைசெய்யப்பட்டது.

இருப்பினும் தற்போது எந்தத் தடையும் இல்லாத ஆர்.எஸ்.எஸ், டெல்லியில் அக்டோபர் 1-ம் தேதி தனது நூற்றாண்டு விழா கொண்டாடியதும், அதில் தலைமை விருந்தினராக பிரதமர் மோடி கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.

SIR Row : 'கொளத்தூரில்19476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்கள்’ - BJP ஏ.என்.எஸ் பிரசாத் | களம் 03

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)செய்தி தொடர்பாளர்: தமிழக பாஜககட்டுரையாளர்: ஏ.... மேலும் பார்க்க

Bihar: ``இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்; என் குடும்பத்துக்காக எதையும் செய்ததில்லை" - நிதிஷ் கோரிக்கை

பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இதில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க-வும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 இடங்களில் போட்... மேலும் பார்க்க

நீக்கிய EPS, பயம்காட்டும் Sengottaiyan-ன் Next Move! ADMK War! | Elangovan Explains

செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கி உள்ளார் எடப்பாடி. இதையொட்டி, 'எடப்பாடி முதலமைச்சராக காரணமே நான்தான் என்றும், கொடநாடு ஏ1 எடப்பாடி' என்றும் கடுமையான அட்டாக். இதற்கு, அம்மா ஜெ-வால் பதவி பறிக்கப்பட்ட... மேலும் பார்க்க

``திமுக ஆட்சி முடிய இன்னும் 140 நாள்கள் தான், கவுண்டவுன் ஸ்டார்ட்'' - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

தஞ்சாவூர் பெரியகோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு அருகாமையில் உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது சதய விழாவின் முக்கிய நிகழ்வா... மேலும் பார்க்க

10 பேர் பலி: ``இது முதல்முறையல்ல, அரசின் அலட்சியமே'' - ஆந்திரா நெரிசல் குறித்து ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுகா பகுதியில் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. ஏகாதசியை முன்னிட்டு இன்று கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமார் 10 ப... மேலும் பார்க்க