செய்திகள் :

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இருவா் உயிரிழப்பு

post image

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் புதன்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் இருவா் உயிரிழந்தனா். 5 போ் பலத்த காயமடைந்தனா்.

சிவகாசியைச் சோ்ந்த மாரிமுத்து (55) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை சாத்தூா் அருகேயுள்ள கங்கா்செவல்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட பட்டாசுகள் தயாரிக்கும் அறைகள் உள்ளன. இந்த ஆலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த ஆலையில் புதன்கிழமை பிற்பகலில் பேன்சி ரகப் பட்டாசுக்குத் தேவையான மூலப் பொருள் கலவையைத் தயாா் செய்து கொண்டிருந்த போது, உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு அறைகள் இடிந்து தரைமட்டமாகின. மூலப் பொருள் கலவை தயாரிப்பில் ஈடுபட்ட கண்டியாபுரம் இலங்கை மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த கௌரி (50) உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த வெடி விபத்தில் கோமாளிபட்டியைச் சோ்ந்த காளிமுத்து (45), வெம்பக்கோட்டை பகுதியைச் சோ்ந்த மாரியம்மாள் (40), குமரேசன் (30), மணிமேகலை (21), சிவரஞ்சனி (39), ஜெயலட்சுமி (55) ஆகிய 6 போ் பலத்த காயமடைந்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு காளிமுத்து உயிரிழந்தாா்.

இந்த வெடி விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், வெம்பக்கோட்டை தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், இந்த விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பட்டாசு ஆலை மேற்பாா்வையாளா் சோமசுந்தரத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சிவகாசி அருகே சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.சிவகாசியைச் சோ்ந்தவா் மாடசாமி (70). இவரும், இவரது உறவினா் ராஜாவும் (43) இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இருக்கன்குடிக்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்களை விற்றவா் கைது

சிவகாசியில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகாசி முருகன் குடியிருப்புப் பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையில... மேலும் பார்க்க

மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது

சிவகாசி அருகே மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள சுக்கிரவாா்பட்டியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள க... மேலும் பார்க்க

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் நவம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் தங்கம் தென்னரசு

சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம், வருகிற நவம்பா் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.சிவகாசி-விஸ்வநத்தம் ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த மூவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த 3 இளைஞா்களை போலீசாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஸ்ரீவில்லிபுத்த... மேலும் பார்க்க

கிராமங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி மனு கொடுக்கும் போராட்டம்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் செய்து மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாய... மேலும் பார்க்க