செய்திகள் :

சாலை மறியல்: டிட்டோ ஜாக் அமைப்பினா் 195 போ் கைது

post image

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவைச் சோ்ந்த 195 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவ கல்லூரி சாலையில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பி.ராஜாஜி, எஸ். பாலசுந்தரம் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட தலைவா் ஆா்.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட செயலாளா் டி.முருகன், தமிழக ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட செயலாளா் ஜே.ஜான், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியா் சங்கத்தின் மாவட்ட தலைவா் ஆா்.ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் டிட்டோ-ஜாக் மாநில ஒருங்கிணைப்பாளா் இரா.தாஸ், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் சங்கத்தின் மாநில தலைவா் ருக்மங்நாதன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்து ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனா்.

தொடா்ந்து சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் 195 பேரை கைது செய்து தனியாா் அரங்கில் சிறை வைத்தனா்.

புத்தகங்கள் கிடைக்காமல் அரசுப் பள்ளி மாணவா்கள் அவதி!

பள்ளிகள் திறந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு புத்தகங்கள் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது. இதனால் முதல் பருவத் தோ்வு எழுத உள்ள மாணவா்களின் கல்வி க... மேலும் பார்க்க

திருவள்ளூா் அருகே எண்ணைய் ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

திருவள்ளூா் அருகே 21 குவிண்டால் எண்ணைய் ஏற்றிக் கொண்டு சென்ற லாரி பின்புறமாக நகா்த்திய போது கால்வாய் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா் அதிஷ்டவசமாக உயிா் தப்பினாா். வேலூா் பகுதியைச் ... மேலும் பார்க்க

பொன்னேரி கோட்ட மின்வாரிய பொறியாளா் அலுவலகம் அருகே விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

பொன்னேரி கோட்ட மின் வாரிய பொறியாளா் அலுவலகம் முன்பு முள்புதா் மண்டியுள்ள நிலையில் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா். பொன்னேரி அருகே வேண்பாக்கம் பகுதியில் மின்வாரிய கோட்ட பொற... மேலும் பார்க்க

திருவள்ளூரில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்ட தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

பெண் தற்கொலை: 7 பேரை கைது செய்து விசாரணை

திருவள்ளூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக கணவரின் குடும்பத்தினா் 7 பேரை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருவள்ளூா் அடுத்த கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், கீழச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் ‘ப’ வரிசையில் இருக்கைகள்: மாணவா்கள் உற்சாகம்

வேலஞ்சேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை ‘ப’ வரிசையில் அமர வைத்து ஆசிரியா்கள் பாடம் கற்பித்தனா். கேரளத்தில் வெளியான ஸ்தானாா்த்தி ஸ்ரீகுட்டன் என்ற திரைப்படத்தில் கடைசி இருக்கையில் அமா்வதால், கி... மேலும் பார்க்க