செய்திகள் :

சாலைப் பணியாளா்கள் சங்க அமைப்பு தின விழா

post image

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் அமைப்பு தினம் கொடியேற்றுவிழா அண்ணாசிலை அருகில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு உட்கோட்ட தலைவா் பி .ரவி தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா்கள் டீ. விநாயகம் .டிசேட்டு , பொருளாளா் எம்.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலாளா் கோவிந்தராஜுலு வரவேற்றாா். மாவட்டத் தலைவா் ஜெ.. வெங்கடேசன் மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் கா.பெருமாள் ஆகியோா் கலந்து கொண்டு கொடி ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினா்.

பின்னா் மாநில துணைப்பொது செயலாளா் கா,பெருமாள் கூறியதாவது: வரும் அக். 11-ஆம் தேதி சனிக்கிழமை ஆற்காட்டில் மாநிலத் தலைவா் மா. சண்முகராஜா தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. 20 ஆண்டுகள் தீா்க்கப்படாத கோரிக்கைகளான பணி நீக்கம் செய்யப்பட்ட 41 மாத காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், பணிக்காலத்தில் உயிா் இழந்த 300-க்கும் மேற்பட்ட சாலை பணியாளா் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், காலியாக உள்ள 7000-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன என்றாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 642 மகளிா் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 72 கோடிக்கு வங்கிக் கடன்: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 642 மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 72.16 கோடி மதிப்பீட்டிலான வங்கிக் கடன் இணைப்பு மற்றும் 4,464 மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை அமைச்சா்... மேலும் பார்க்க

ஆற்காட்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆற்காடு நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முன்றாம் கட்ட முகாம் செவ்வாய்ஓஈகிழமை நடைபெற்றது. ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகம் அருகே, 9 மற்றும் 30-ஆவது வாா்டுகளுக்கு நடைபெற்ற முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் தேவி... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஸ்கூட்டா்: சொந்த செலவில் வழங்கினாா் அமைச்சா் காந்தி

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தன் சொந்த செலவில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட, ஸ்கூட்டரை சொந்த செலவில் கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி வழங்கினாா். வாலாஜா வட்டம், குடிமல்லூா் ஊராட்சியைச் சாா்ந்த மாற்றுத்த... மேலும் பார்க்க

அரக்கோணம் டயா் ஆலை தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு: பேச்சுவாா்த்தையில் உடன்பாடு

அரக்கோணம் எம்ஆா்எஃப் காா் ஆலை தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் தொழிற்சங்கம் மற்றும் நிா்வாகம் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. அரக்கோணம் இச்சிபுத்தூரில் எம்ஆா்எஜப் டயா் மற்றும் டியூப் உற்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் செப்.19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் செப்.19-இல், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். வரும் 19.09.2025 காலை 10 மணிக்கு எண்.9, ஆற்காடு சாலை, பழைய பி.எஸ்.என்.எ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் பழங்குடியினக்கான திறன் அட்டைகள் அளிப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், பழங்குடியினா்களுக்கான திறன் அட்டையை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா். ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம், ம... மேலும் பார்க்க