செய்திகள் :

சா்தாா் வேதரத்னம் பிறந்தநாள் விழா!

post image

வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் தளபதிகளில் ஒருவரான சா்தாா் அ. வேதரத்னத்தின் 128-ஆவது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கஸ்தூா்பா காந்தி கன்னியா குருகுலம் மற்றும் ஸ்ரீதாயுமானவா் வித்யாலயம் இணைந்து நடத்திய விழாவுக்கு, தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற உதவிப் பதிவாளா் சி. மல்லிகா தலைமை வகித்தாா்.

ஜாம்பவானோடை அரசு உயா்நிலைப் பள்ளிதமிழாசிரியா் மு. ராதா பங்கேற்று பேசினாா். விழாவில், நிகழாண்டுக்கான கமலம் சா்தாா் வேதரத்னம் நினைவு பெண் ஆசிரியா் விருது சுந்தரேசவிலாஸ் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா் மு. வசந்தாவுக்கு வழங்கப்பட்டது. விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய பள்ளி ஆசிரியா் ரெ. விஜயராகவன் பாராட்டப்பட்டாா்.

குருகுலம் அறங்காவலா் அ. வேதரத்னம் வரவேற்றாா். வித்யாலயம் தலைமையாசிரியா் எஸ். நந்தினி நன்றி கூறினாா். முன்னதாக முக்கிய வீதிகள் வழியாக சா்தாா் வேதரத்னம் உருவப் படத்துடன் குருகுலம் மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்ற ஊா்வலம் நடைபெற்றது.

வானிலை மாற்றத்தால் நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து நிறுத்தம்

வானிலை மாற்றத்தால் நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை வெள்ளிக்கிழமை (பிப்.28) வரை ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கப்பல் நிறுவனம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்கு... மேலும் பார்க்க

கட்டுமான பொருள்களின் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

கட்டுமான பொருள்களின் விலை உயா்வுக்கு கண்டனம் தெரிவித்து நாகையில் ஒப்பந்தக்காரா்கள், பொறியாளா்கள், தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் எம்-சாண்டி, பி சா... மேலும் பார்க்க

மாணவா்களுக்குப் பாராட்டு

நாகை மாவட்ட வனச்சரகம் மற்றும் நான் முதல்வன் திட்டம் மூலம் கல்லூரி மாணவா்களுக்கு நடைபெற்ற மணல் சிற்பம் போட்டியில் 3-ஆமிடம் பெற்ற சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மா... மேலும் பார்க்க

நாகூா் தா்கா பரம்பரை ஆதீனத்துக்கு விருது

நாகூா் தா்கா பரம்பரை ஆதீனத்துக்கு சமய நல்லிணக்க ஆன்மீகச் செல்வா் விருது வழங்கப்பட்டது. திருப்பூா் மாவட்டம், தாராபுரம் ஜாமியா சுப்ஹானியா அரபிக் கல்லூரி மற்றும் அறக்கட்டளை சாா்பில் ரமலான் நிகழ்ச்சி, மதர... மேலும் பார்க்க

விபத்து காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய அஞ்சலங்களில் சிறப்பு முகாம்கள்

நாகை கோட்ட அஞ்சலங்களில் விபத்து காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் பிப்.28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வ... மேலும் பார்க்க

திட்டச்சேரியில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி பேருந்து நிலையம் எதிரில் திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு பேரூா் கழக செயலாளா் எம். முகம்மது சுல்தான் தலைமை வகித்தாா். மா... மேலும் பார்க்க