செய்திகள் :

சிங்கப்பெண் அதிரடிப்படை: 'பெண்களை தொந்தரவு செய்தால் சகித்துக்கொள்ள மாட்டேன்'- முதல்வர் விஜய்

post image

சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் இன்று (ஜூன்.9) தொடங்கி வைத்திருக்கிறார்.

இதன் துவக்க விழாவில் பேசிய முதல்வர் விஜய், " ஒரு சில நிகழ்ச்சி மட்டும்தான் மனசுக்கு நெருக்கமாக இருக்கும். அந்தவகையில் இது என் மனதுக்கு நெருக்கமான நிகழ்ச்சி. நம் வீட்டில் அம்மா, அக்கா, பாட்டி என ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்பும் முக்கியம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பார்க்கும்போது மனம் வலிக்கிறது. பெண்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவோம். பெண்களின் பாதுகாப்பிற்கு போதை ஒழிப்பு முக்கியம். போதையை அகற்ற வேண்டும்.

பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விட்டதால் தான் போதைப்பொருள் நடமாட்டம் பரவி விட்டது. பெண்களை தொந்தரவு செய்தால் சகித்துக்கொள்ள மாட்டேன். குற்றவாளிகளுக்கு விரைவாகத் தண்டனை பெற்று தர வேண்டும். பெண்களுக்கான கண்ணியம் உச்சபட்ச முன்னுரிமை.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க நாட்டில் முதலாவதாக ட்ரோன்கள் வாயிலாக ரோந்து நடைபெற இருக்கிறது. பெண்களும், குழந்தைகளும் மரியாதையாக வாழ்கிறார்களா என்பதில் தான் ஒரு அரசின் வெற்றி உள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தனிமனித ஒழுக்கம் சரியாக இருந்தால் நம் சமூகம் மாறும். பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும். இந்த சிங்கப்பெண் அதிரடி படைத் திட்டம் தொடங்க காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி" என்று பேசியிருக்கிறார்.

அனல் பறந்த ஆலோசனைக் கூட்டம்: காங்கிரஸை வறுத்தெடுத்த மாநிலக் கட்சிகள்; 'அன்போடு' ராகுல் காந்தி பதில்!

டெல்லியில் ஜூன் 8 (நேற்று) நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில், பல மாநிலக் கட்சிகள் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்திருக்கின்றன. அந்த ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் 'கூட்டணியின் செய... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: மம்தா கட்சிக்குள் கலகம்! 3-ல் 2 பங்கு பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக அரசு?

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள திடீர் பிளவு, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை... மேலும் பார்க்க

DAC: OMR-ல் சாட்டிலைட் அலுவலகம் தொடக்கம்! சென்னையின் முதல் English-Themed வசிப்பிட திட்டம் அறிமுகம்

சென்னையின் மிகவேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு மற்றும் IT தளமான பழைய மகாபலிபுரம் சாலையில் (OMR), 'DAC டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்' தனது புதிய சாட்டிலைட் அலுவலகத்தை திறந்து வைத்துள்ளது.இந்த திறப்பு... மேலும் பார்க்க

கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தான்; ஆனால், `அமைச்சர்' பதவிகளில் ஏகப்பட்ட பிரச்னை!

சில மாதங்களாக, கர்நாடகா முதலமைச்சர் பதவிக்கு குழப்பம் நீடித்து வந்தது. அது சரியாகவே, இப்போது அந்தக் குழப்பம் மடைமாறி கர்நாடகா அமைச்சர்கள் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த ஜூன் 3-ம் தேதி, கர்நாடகா முதலமைச... மேலும் பார்க்க

கிள்ளியூர்: காங்கிரஸ் அமைச்சர் தொகுதியில் மறு தேர்தல் நடத்த தவெக வேட்பாளர் மனு; கூட்டணியில் குழப்பம்

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றில்கூட த.வெ.க வேட்பாளர்கள் வெற்றிபெறவில்லை. கன்னியாகுமரி தொகுதியில் மூன்றாம் இடத்திலும், மீதமுள்ள... மேலும் பார்க்க