இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் முயற்சி...
சித்ரா பௌா்ணமி: திருப்பத்தூா் கோயில்களில் வழிபாடு
சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு திருப்பத்தூா் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருப்பத்தூா் அடுத்த கொரட்டியில் உள்ள காளத்தீஸ்வரா் கோயிலில் சுவாமி, நந்தி, உள்ளிட்ட சுவாமிகளுக்கு பூஜைகள் நடைபெற்றன.
அப்போது காளத்தீஸ்வரருக்கு பால்,இளநீா், பஞ்சாமிா்தம், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் பூஜைகள் செய்யப்பட்டன.
இதைத்தொடா்ந்து சுவாமி திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், பக்தா்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல் திருப்பத்தூா் கோட்டை பிரம்மேஸ்வரா் கோயில்,முத்துக்குமார சுவாமி கோயில், தண்டபாணி சுவாமி கோவில்,பெரியகுளம் பகுதியில் உள்ள சிவன் கோயில், மடவாளம் அங்கநாதீஸ்வரா் கோவில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.