செய்திகள் :

"சினிமாவில் பெண்களைக் காட்டும் விதம் கொடூரமானதாக இருக்கிறது" - 'பெத்தி' பட விவகாரம் குறித்து கங்கனா

post image

ராம் சரண் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'பெத்தி'. புச்சி பாபு சனா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தில் நடிகை ஜான்வி கபூர் 'அச்சியம்மா' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

ஜான்வியின் கதாபாத்திரம் காட்டப்பட்ட விதம், தவறான கேமரா கோணங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, துன்புறுத்தல், சம்மதமில்லா செயல் ஆகியவற்றை சாதாரணமாக்குவது போன்ற வசனங்கள் ஆகியவை இணையதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை எவ்வாறு எழுத வேண்டும், எப்படித் திரையில் காட்ட வேண்டும் என்பது குறித்த விவாதங்களும் இதனால் தீவிரமடைந்தன.

இதனைத்தொடர்ந்து அந்தப் படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனா சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் 'India Today'-விற்கு இதுதொடர்பாக பேட்டி அளித்திருக்கிறார்.

அதில், "நீங்கள் ஒரு லோக்கல் டிரெயினில் பயணித்தாலும் கூட, அங்கு பெண்கள் ஒரு பொருளாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். எனவே, திரைப்படங்களில்தான் அவர்கள் அவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறான ஒன்று.

நீங்கள் லோக்கல் டிரெயினிலோ அல்லது உள்ளூர் பேருந்திலோ பயணித்தால், அங்கு நடக்கும் தள்ளுமுள்ளுகளும் இடிப்புகளும் அதைத்தான் காட்டுகின்றன. இது பொதுச் சாலைகளிலும் கூட நடக்கிறது.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

ஆனாலும், திரைப்படங்கள் பெண்களைக் காட்டும் விதம் மிகவும் கொடூரமானதாகவே இருக்கிறது. அது 'செக்ஸி-செக்ஸி முஜே லோக் போலே' போன்ற கவர்ச்சிப் பாடல்களாக இருக்கட்டும், அல்லது 'சர்க்காய் லோ காட்யா' போன்ற பாடல்களாக இருக்கட்டும், எல்லாமே அவ்வாறுதான் இருந்திருக்கின்றன.

சில நேரங்களில் ஒரு பெண்ணைக் கவர்ச்சியாகக் காட்டுவதற்கும், ஆபாசத்திற்கும், பெண் குலத்திற்கு இழைக்கப்படும் முழுமையான அநீதிக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு அறிந்தோ அல்லது அறியாமலோ மங்கிப்போய்விடுகிறது. பொழுதுபோக்குத் துறையின் இயல்பே அப்படித்தான் என்று நான் நினைக்கிறேன்" என்று கங்கனா கூறியிருக்கிறார்.

"நடிகைகள் தங்களுக்கான எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்" - 'பெத்தி' விவகாரம் குறித்து நித்யா மேனன்

ராம் சரண் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'பெத்தி'. புச்சி பாபு சனா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் ப... மேலும் பார்க்க

Maa Inti Bangaaram: "சாய் பல்லவியை மனதில் வைத்துதான் இந்தக் கதை உருவாக்கப்பட்டது!' - பகிரும் சமந்தா

சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்ஷன் படமான 'மா இண்டி பங்காரம்' ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். கடைசியாக சமந்தா நடிப்பில் 'க... மேலும் பார்க்க

'பெத்தி' படத்தில் ஜான்வி கபூர் கதாபாத்திரம்: - பகிரங்க மன்னிப்பு கேட்ட இயக்குநர் புச்சி பாபு சனா!

ராம் சரண் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் பெத்தி. புச்சி பாபு சனா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் பு... மேலும் பார்க்க

Peddi Review: அடையாளத்துக்காகக் களமிறங்கும் விளையாட்டு வீரன் - படமாகக் கோப்பையை வென்றதா?

அரசாங்க ஏடுகளில் எந்தவித பெயர் கொண்டும் அச்சேறாமல் இருக்கும் தன்னுடைய மலைக் கிராமத்துக்கும், அதன் காரணமாக அடையாளமற்று, அடிப்படை வசதிகளற்றுக் கிடக்கிற தன் கிராம மக்களுக்கும் தன் விளையாட்டுத் திறமையால் ... மேலும் பார்க்க

`சமந்தா விவாகரத்து வதந்திகள், ஆபாச சித்தரிப்புகள்' - நீதிமன்றத்தை நாடிய நாக சைதன்யா

இணையதளங்களில் தனது அடையாளம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக நடிகர் நாக சைதன்யா டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவைத் திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யா, 2021-ல் விவாகரத... மேலும் பார்க்க

Peddi: ``சினிமாவின் உச்சத்தை விட்டுவிட்டு பொதுச்சேவைக்கு வந்த முதல்வர் விஜய்" - ராம் சரண் வாழ்த்து

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கித்தில் உருவாகியிருக்கும் 'பெத்தி' திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்... மேலும் பார்க்க