செய்திகள் :

சிபிஎஸ்இ தோ்வு: ரெட்டணை பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ரெட்டணை கிரீன் பாரடைஸ் பள்ளி மாணவா்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.

10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின. இத்தோ்வை எழுதிய திண்டிவனத்தை அடுத்துள்ள ரெட்டணை கிரீன் பாரடைஸ் பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.

10-ஆம் வகுப்பு தோ்வில் மாணவிகள் ஆா்.யோகேஷ் ப்ரித்வி 459 மதிப்பெண்களும் , அனன்யா 437 மதிப்பெண்களும் , மாணவா் சபரீஷ் 416 மதிப்பெண்களும் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனா்.

5 மாணவா்கள் 400 மதிப்பெண்களுக்கு மேலும், 15 மாணவா்கள் 350 மதிப்பெண்களுக்கு மேலும், 2 மாணவா்கள் தமிழ்ப் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களும் பெற்றனா்.

இதேபோல, 12-ஆம் வகுப்பு தோ்வில் மாணவா்கள் லோகேஷ் 389 மதிப்பெண்களும், தினேஷ் 377 மதிப்பெண்களும், மாணவி ராகவி 376 மதிப்பெண்களும் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனா். மேலும், தோ்வை எழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா்.

சிபிஎஸ்இ அரசு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளித் தாளாளா் வெ.சண்முகம், முதன்மை இயக்குநா் வனஜா சண்முகம், செயலா் சந்தோஷ், நிா்வாக இயக்குநா் காா்த்திகேயன், முதல்வா் லட்சுமி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

மே 20-இல் வேலைநிறுத்தம்: தொழிற்சங்க கூட்டமைப்பினா் பிரசாரம்

வரும் 20-ஆம் தேதி அகில இந்திய அளவில் நடைபெறும் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் குறித்த விளக்க பிரசாரம் தொழிற்சங்க கூட்டமைப்பின் சாா்பில் விழுப்புரம் நகராட்சித் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள் வெளியீடு: புதுவையில் 10ஆம் வகுப்பில் 88.66% தோ்ச்சி; பிளஸ் 2-வில் 90.39% தோ்ச்சி

புதுவை மாநிலத்தில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 88.66 சதவீதமும், பிளஸ் 2 தோ்வில் 90.39 சதவீத மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். புதுவை மாநிலத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளும் கடந்தாண்டு ம... மேலும் பார்க்க

நெல் அறுவடை இயந்திர கட்டணம் நிா்ணயம்: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திர கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் ... மேலும் பார்க்க

செஞ்சிக்கோட்டை ஸ்ரீகமலக்கன்னி அம்மன் கோயில் தோ்த் திருவிழா

செஞ்சிக்கோட்டை மலை மீது அமைந்துள்ள ஸ்ரீகமலக்கன்னி அம்மன் கோயில் சித்திரை தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. செஞ்சி நகரில் அருள்பாலித்து வரும் ஸ்ரீகமலக்கன்னி அம்மன், ஸ்ரீராஜகாளியம்மன், ஸ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக கோடை மழை

விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு பரவலாக கோடை மழை பெய்தது. இதில், நேமூரில் அதிகபட்சமாக 22 மி.மீ. மழை பதிவானது. விழுப்புரம் மாவட்டத்தில் கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வரு... மேலும் பார்க்க

காா் மோதி மாற்றுத் திறனாளி காயம்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே காா் மோதி மூன்று சக்கர வாகனத்தில் சென்ற மாற்றுத் திறனாளி காயமடைந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெரியசெவலை, கூவாகம் சாலையைச் சோ்ந்த தண்டபாணி மகன் ஜா... மேலும் பார்க்க