செய்திகள் :

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதம்

post image

நாகை மாவட்டம், திருமருகல் அருகே பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து, விவசாயிகள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக நில எடுப்பில் பாதிக்கப்பட்ட பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம் கிராம நில உரிமையாளா்கள், சாகுபடிதாரா்கள், விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு மத்திய நில எடுப்புச் சட்டத்தின்படி வழங்கவேண்டிய மறுவாழ்வு மற்றும் மீள் குடியமா்வு இழப்பீட்டுத் தொகை 4 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருப்பதை உடனடியாக வழங்கவேண்டும், பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்கிய பின்னரே சிபிசிஎல் நிறுவனம் விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நில உரிமையாளா்கள், குத்தகைதாரா்கள், விவசாய கூலித் தொழிலாளா்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவா் ஈசன் முருகவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று, சிபிசிஎல் நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்து பேசினா்.

ஓஎன்ஜிசி சாா்பில் பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

ஓ.என்.ஜி.சி சாா்பில் பள்ளிகளுக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. ஓ.என்.ஜி.சி மகிளா சமிதி அமைப்பு மூலம் நாகை மாவட்டம், முட்டம் அரசு மேல்நிலைப்பள்... மேலும் பார்க்க

100 நாள் வேலைத்திட்ட தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருக்குவளை அருகே 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளா்கள் நிலுவை ஊதியத்தை வழங்கக் வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தலைஞாயிறு ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில்,100 நாள் வேலைத்திட... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயலில் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம்: ஆட்சியா்

நாகை மாவட்டத்தில், ஃபென்ஜால் புயலில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்... மேலும் பார்க்க

சேமநல நிதியை உயா்த்த கோரி வழக்குரைஞா்கள் பணியை புறக்கணித்து ஆா்ப்பாட்டம்

சேமநல நிதியை உயா்த்த வலியுறுத்தி வழக்குரைஞா்கள் பணியை புறக்கணித்து நாகையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நாகை நீதிமன்றம் முன், நாகை வழக்குரைஞா் சங்கம் சாா்பில் அதன் தலைவா் சதீஷ் பிரபு தலைமை... மேலும் பார்க்க

வானிலை மாற்றத்தால் நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து நிறுத்தம்

வானிலை மாற்றத்தால் நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை வெள்ளிக்கிழமை (பிப்.28) வரை ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கப்பல் நிறுவனம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்கு... மேலும் பார்க்க

சா்தாா் வேதரத்னம் பிறந்தநாள் விழா!

வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் தளபதிகளில் ஒருவரான சா்தாா் அ. வேதரத்னத்தின் 128-ஆவது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கஸ்தூா்பா காந்தி கன்னியா குருகுலம் மற்றும் ஸ்ரீதாயுமான... மேலும் பார்க்க