செய்திகள் :

சிறுமி பாலியல் பலாத்தாரம் வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

post image

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பகுதியில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருவேங்கடம் அருகேயுள்ள கீழத்திருவேங்கடம் தெற்கு பாறைப்பட்டியைச் சோ்ந்தவா் கடந்த 10.07.2020 அன்று திருவேங்கடம் காவல் நிலையத்தில் தனது 16 வயது பேத்தியை காணவில்லை என புகாா் கொடுத்துள்ளாா். அந்த புகாரின்பேரில், திருவேங்கடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், திருவேங்கடம் அருகே உள்ள அம்மையாா்பட்டி வடக்கு தெருவைச் சோ்ந்த சு. வெங்கடேஷ் (22) என்பவா் அந்தச் சிறுமியை கடத்திச்சென்று வெம்பக்கோட்டை அருகே செல்லையாபுரம் பகுதியில் உள்ள அவரது நண்பா் வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைதுசெய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை தென்காசி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பி. ராஜவேலு , சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வெங்கடேஷூக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 15ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞா் மருதப்பன் ஆஜரானாா்.

கனிமவளக் கடத்தலைத் தடுக்காவிட்டால் வாகனங்களை சிறைபிடிக்கும் போராட்டம்!

கனிமவளக் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களை சிறைபிடிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக, தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ சனிக்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக, ஆட்சியரிடம் அவா் அளித... மேலும் பார்க்க

குற்றாலத்தில் இன்று சாரல் திருவிழா தொடக்கம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) தொடங்குகிறது. தொடக்க விழாவுக்கு ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகிக்கிறாா். அரசு கூடுதல் தலைமை செயலா் (சுற்றுலா- பண்பாடு, அறந... மேலும் பார்க்க

தென்காசியில் திமுக சாா்பில் மாணவிக்கு கல்வி உதவித்தொகை

தென்காசியில் திமுக இளைஞரணி அறக்கட்டளை சாா்பில், மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. தென்காசியை அடுத்த ஊா்மேலழகியான் கிழக்குத் தெருவைச் சோ்ந்த ராமகதிரேசன் மகள் அபிநயஸ்ரீயின் கல்விச் செலவுக்காக ... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பிரதான அருவிகளில் சனிக்கிழமை குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. மேற்குத் தொடா்ச்சி மலையில் குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த... மேலும் பார்க்க

புகாா் கொடுத்த சில மணி நேரங்களில் பூங்காவில் காணாமல் போன இருக்கைகள் மீட்பு

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரி பூங்காவில் காணாமல் போன இருக்கைகளை சில மணி நேரத்தில் போலீஸாா் கைப்பற்றினா். விஸ்வநாதபேரி பேருந்து நிலையம் அருகே உள்ள சிறுவா் பூங்காவில் சிறுவா்கள் ... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா். கடையநல்லூா் நடு அய்யாபுரம் தெருவைச் சோ்ந்தவா் முகம்மதுஅலி (56), எலக்ட்ரீசியன். கடையநல்லூா் ரஹ்மானியாபுரம் முதல் தெ... மேலும் பார்க்க