துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 25 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கம்பம் அருகேயுள்ள க.புதுப்பட்டி, கல்ராயபெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் சுருளிவேல் (44). இவா் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கடந்த 2023-ஆண்டு, டிச.23-ஆம் தேதி உத்தமபாளையம் மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் சுருவேலுவுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பி.கணேசன் தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரணமாக மருத்துவம், கல்விச் செலவுக்கு ரூ. ஒரு லட்சத்தை சிறுமியின் தாயாரிடமும், சிறுமியின் பராமரிப்புச் செலவுக்கு ரூ.5 லட்சத்தை அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் சிறுமியின் பெயரில் வைப்புத் தொகையாகவும் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.