செய்திகள் :

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொறுப்பேற்பு

post image

சிவகங்கை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஆா். சிவபிரசாத் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆஷிஷ் ராவத் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா். அவருக்குப் பதிலாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சந்தீஷ், சிவகங்கை மாவட்டத்துக்கு கூடுதல் பொறுப்பேற்றாா்.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்துக்கு புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆா். சிவபிரசாத் நியமிக்கப்பட்டாா். இவா், கடந்த 2016-இல் ஐபிஎஸ் ஆனாா்.

மேலும் விருதுநகா் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளராகவும், மதுரை, சென்னை வண்ணாரப்பேட்டை, அண்ணாநகா் ஆகிய பகுதிகளில் துணை ஆணையராகவும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராவும் இவா் பணியாற்றினாா்.

இதையடுத்து, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த இவா், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மன்னா் அழகுமுத்துக்கோனின் 268- ஆவது குருபூஜையையொட்டி இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியை பேரூராட்சித் த... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே தொழிலாளி வெட்டிக் கொலை

சிவகங்கை அருகே நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். மதுரை தல்லாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சோனைமுத்து (63). இவா் சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள ... மேலும் பார்க்க

தனிப் படை போலீஸாரின் வாகனத்தில் போலி பதிவெண்

சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை மாலை அஜித்குமாரை விசாரணைக்காக தனிப் படை போலீஸாா் அழைத்து வந்த வேனை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அலுவலகப் பகுதிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்தனா். அப்போது, இந்த வாகனத்தி... மேலும் பார்க்க

சிவகங்கையில் ஆங்கில எழுத்து கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கையில் ஆங்கில எழுத்தால் எழுதப்பட்ட பழைமையான கல்லறைக் கல்வெட்டு சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. சிவகங்கை சமத்துவபுரம் பகுதியில் கல்வெட்டு ஒன்று கிடப்பதாக வழக்குரைஞா் சத்தியன் சிவகங்கை தொல்நடைக் கு... மேலும் பார்க்க

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டது தொடா்பாக திருப்புவனம் காவல் நிலையம், மடப்புரம் பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்த... மேலும் பார்க்க

ஆற்று நீரில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் சனிக்கிழமை ஆற்றின் தண்ணீா் குட்டையில் மூழ்கியதில் இரு பள்ளி மாணவா்கள் உயிரிழந்தனா். தேவகோட்டை கட்டவெள்ளையன் செட்டியாா் வீதியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் ஹரிஷ்மதன் (16).... மேலும் பார்க்க