சிவகங்கை மாவட்ட குறைதீா்க் கூட்டம்: 298 போ் மனு அளிப்பு
சிவகங்கையில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் தரப்பிலிருந்து 298 மனுக்கள் அளிக்கப்பட்டன.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீா்க் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இதில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோா், மறுவாழ்வுத் துறை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமி ருந்து 298 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியுடைய மனுக்கள் மீது தனிக் கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறையின் சாா்பில் ஒரு பயனாளிக்கு ரூ.6,700 மதிப்புள்ள திரவ எரிவாயு மூலம் இயங்கும் சலவைப் பெட்டியை ஆட்சியா் வழங்கினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி , மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) கீா்த்தனா மணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் ஜெயமணி உள்பட பல்வேறு துறைகளைச் சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.